Skip to main content

3890 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி நிரவல்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றும் 3890 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை கவுன்சலிங் மூலம் பணி  நிரவல் செய்து மாறுதல் வழங்க அரசு அனுமதி அளித்து ஆணையிட்டுள்ளது.


இதுகுறித்து, பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது: அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி மாறுதல் மற்றும் பொது மாறுதல் கவுன்சலிங்  நடத்த ஏற்கனவே இரண்டு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.  

இதையடுத்து, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் கடந்த பிப்ரவரி மாதம் அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் 350  ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் பெற்று சென்றுவிட்டனர். 


மேலும், ஜூன் 16ம் தேதி நடந்த  கவுன்சலிங்கின் மூலம் 103 ஆசிரியர் பயிற்றுநர்கள் பணி மாறுதல் மூலம் சென்றுவிட்டனர். அதனால் மொத்தமுள்ள 4587  பணியிடங்களில் 594ஆக இருந்த காலிப் பணியிடம் மேலும் அதிகரித்து தற்போது 697 ஆக உள்ளது. அதனால் ஆசிரியர் பயிற்றுநர்கள்  எண்ணிக்கை 3890 ஆக குறைந்து  மாநிலம் முழுவதும் சமநிலையற்று காணப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  


மேலும், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணிபுரியும் 3890 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் 15 சதவீத  காலிப்பணியிடங்களை மாவட்ட மற்றும் வட்டார வள மையங்களுக்கும் பொதுவான காலிப்பணியிடமாக ஒதுக்கிவிட்டு, கவுன்சலிங்  மூலம் பணி நிரவல் செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் கவுன்சலிங் மூலம்  மாறுதல் வழங்க இயக்குநர் அனுமதி கேட்டுள்ளார். 


அவரின்  கருத்துருவை அரசு ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் மாநில  திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளபடி 3890 ஆசிரியர் பணியிடங்களில் மாநில சராசரி  காலிப்பணியிடங்களை தவிர்த்துவிட்டு அதற்கு மேற்பட்டு வரும் காலிப் பணியிடங்களையும் கவுன்சலிங் நடத்தி மாறுதல் வழங்க  அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு