Skip to main content

வேளாண் கல்லூரிகளில் 358 இடங்கள் காலி

வேளாண் இளங்கலை படிப்புக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு
நிறைவடைந்தது. தனியார் கல்லுாரிகளில், 358 அரசு ஒதுக்கீட்டு
இடங்கள் காலியாக உள்ளன.தமிழ்நாடு வேளாண் பல்கலையின்,
14 உறுப்பு கல்லுாரிகள், 26 இணைப்புக் கல்லுாரிகள் வாயிலாக,

12 இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. 2018 - 19ம்
கல்வியாண்டுக்கு, 3,422 இடங்களுக்கு, 42 ஆயிரத்து, 676 பேர்
விண்ணப்பித்திருந்தனர்.


வேளாண் பல்கலை டீன் மகிமை ராஜா கூறியதாவது:
சிறப்பு ஒதுக்கீடுகள், தொழில் கல்வி,
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் நிறுவனங்கள் உட்பட
பொது பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு, ஜூலை, 7
முதல், 18 வரை நடந்தது. இதில், 2,672 இடங்கள் நிரப்பப்பட்டன.
ஜூலை, 31 முதல் ஆக., 10 வரை நடந்த, இரண்டாம் கட்ட
கலந்தாய்வில், 392 இடங்கள் நிரப்பப்பட்டன; உறுப்பு

கல்லுாரிகளில், அனைத்து இடங்களும் நிரம்பின. இணைப்பு
கல்லுாரிகளில், 65 இடங்கள், பல்கலையால் நிரப்பப்படும்
 நிலையில், 358 இடங்கள் மட்டும் காலியாக உள்ளன.இளநிலை
முதலாமாண்டு மாணவர்களுக்கு, இன்று கல்லுாரி துவங்குகிறது.
ஒதுக்கப்பட்ட கல்லுாரிகளில், மாலை, 5:00 மணிக்குள்
மாணவர்கள், சேர்க்கை பதிவு செய்ய வேண்டும்

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு