Skip to main content

ஜியோ போன் 2 எவ்வாறு வாங்குவது?

தொலைத்தொடர்பு நிறுவனங்களில் அதிவேக வளர்ச்சியை ஜியோ பெற்றுள்ளது. இது ஜியோ போன் 2 என்ற பெயரில் பட்ஜெட் போன் ஒன்றை விற்பனைக்கு கொண்டு வருகிறது. இன்று நண்பகல் 12 மணிக்கு பிளாஷ் சேல் முறையில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு வரவுள்ளதால், விரைவாக முன்பதிவு
செய்ய வேண்டியுள்ளது.
இதில் குவர்டி(QWERTY) கீ போர்டு, கை ஓஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முந்தைய ஜியோ போனை விட, புதிய ஜியோ போன் 2 இருமடங்கு விலை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஜியோ போன் 2 பிளாஷ் சேலில் முன்பதிவு செய்வோர், அடுத்த 5 - 7 நாட்களில் போனைப் பெறலாம். மேலும் அருகிலுள்ள ஜியோ போன் டீலர்கள் மூலமும் வாங்கலாம்.
இந்தியாவில் ஜியோ போன் 2 விலை:
ஜியோ போன் 2வின் விலை ரூ.2,999 ஆகும். முதல் போன் விற்பனையில் கூறப்பட்டது போல், தற்போது பணத்தை திரும்ப பெறும் வசதி இதில் இல்லை. இதனை jio.com என்ற இணையதளம் மூலம் வாங்கலாம்.
ஜியோ போன் 2 வாங்க விரும்புபவர்கள், இன்று நண்பகல் 12 மணிக்கு ஒரு சில நிமிடங்கள் முன்பாக இணையதளத்தை திறந்து, அதனை ரீ-பெரஷ் செய்து கொண்டிருக்கவும். ஜியோ போன் 2க்கான ரீ-சார்ஜ் பேக்குகள் ரூ.49, ரூ.99, ரூ.153 என அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஜியோ போன் 2 சிறப்பம்சங்கள், வசதிகள்:
இரண்டு நானோ சிம்கள் போடும் வகையில், கை ஓஎஸ் இயங்குதளத்தில் செயல்படுகிறது. இதில் 2.4 இஞ்ச் QVGA டிஸ்பிளே, 512 எம்பி ரேம், 4 ஜிபி உள்ளடக்க மெமரி, மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி உள்ளது. இந்த போனில் 2 மெகா பிக்சல் பின்பக்க கேமரா, விஜிஏ செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது.

இதன்மூலம் 4ஜி வோல்ட், வோ வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்.எஃப்.சி, எஃப். எம் ரேடியோவை இணைத்துக் கொள்ளலாம். கூகுள் அசிஸ்டெண்ட் செயல்படுத்த பிரத்யேக வாய்ஸ் கமெண்ட் பட்டன் காணப்படுகிறது. இந்தப் போன் 2000 mAh பேட்டரி வசதி உள்ளது.
பிளாக்பெர்ரி போனைப் போல, 4 பக்க திருப்புதல் வசதி இதில் இடம்பெற்றுள்ளது. முதல் ஜியோ போனை விட, வடிவமைப்பில் பெரிய மாற்றம் கண்டுள்ளது. டிஸ்பிளே மிகப்பெரிதாக இருக்கிறது. 

Comments

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்