Skip to main content

செல்வமகள் திட்டத்தில் ரூ.10 ஆயிரம் நிதி?

பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, பெற்றோர்கள் அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகளில் சேமிக்க வசதியாக செல்வமகள் சேமிப்பு திட்டம் (சுகன்யா சம்ரிதி யோஜ்னா) மத்திய அரசால் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.


இந்தத் திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் கணக்கைத் தொடங்கலாம். அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை, இந்தத் திட்டம் மூலம் முதலீடு செய்யலாம். தொடக்கத்தில் சேமிக்கும் பணத்துக்கு 9.1 சதவிகித வட்டி என அறிவிக்கப்பட்டது. ஆனால், படிப்படியாக வட்டி குறைக்கப்பட்டு தற்போது 8.1 சதவிகித வட்டி அமலில் உள்ளது.

இந்த நிலையில், செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் ஒன்று முதல் எட்டு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்குப் பிரதமர் மோடி ரூ.10 ஆயிரம் வழங்குவதாகவும் இதற்காகப் பதிவு செய்வதற்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி கடைசி நாள் என்றும் செய்திகள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இது தொடர்பாக பிரதமர் மோடியை டேக் செய்து பலரும் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இந்தச் செய்தி உண்மையானதுதானா என்று SM Hoax Slayer உண்மை கண்டறியும் இணையப்பக்கம் பரிசோதனை செய்தது. அதில், இந்தச் செய்தி போலியானது என்று தெரியவந்துள்ளது.




செய்தியில் தரப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து, ‘எம்மை பற்றி’ பகுதிக்குச் சென்றால், லிங்க்கிற்கும் இந்திய அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரியவருகிறது.

இரண்டாவதாக அந்த லிங்க்கில் http://sukanya-yojna.m-indian-gov.in என்று முகவரி இடம் பெற்றுள்ளது. ஆனால், இந்திய அரசின் அதிகாரபூர்வ இணைய பக்கத்தின் முகவரி india.gov.in என்பதாகும். அதேபோல், அந்த லிங்க்கை கிளிக் செய்தால், நமது தனிப்பட்ட தகவல்களைப் பூர்த்தி செய்யும் பக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது.


மேலும், இந்த இணைய பக்கம் ஆகஸ்ட் 6ஆம் தேதி மகாராஷ்டிராவில் உருவாக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு