Skip to main content

10ம் வகுப்பு துணை தேர்வு இன்று, 'ரிசல்ட்' வெளியீடு

பத்தாம் வகுப்பு துணை தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. பத்தாம் வகுப்புக்கு, மார்ச்சில் நடந்த பொது தேர்வுக்கு விண்ணப்பித்து, பங்கேற்க முடியாதவர்கள்;
தேர்வில் பங்கேற்று ஏதாவது சில பாடங்களில், தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஜூனில் சிறப்பு துணை தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.இதற்கான அறிவிப்பை, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.



முடிவுகளை, http://www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில், இன்று பிற்பகலில் தெரிந்து கொள்ளலாம். தற்காலிக சான்றிதழ்களையும், இன்றே பதிவிறக்கம் செய்யலாம்.மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், நாளை மற்றும் நாளை மறுநாள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு சென்று, பதிவு செய்ய வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும், ஒப்புகை சீட்டையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்