Skip to main content

Whatsapp's Latest Updates

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் செயலி,
இந்தியாவில் உள்ள 200மில்லியனுக்கும் அதிகமான தனது பயனர்களுக்காக புதிய வசதியை பரிசோதித்து வருகிறது.



வாட்ஸ்ஆப் பார்வேர்டு வசதிக்கு இந்தியாவில் கட்டுப்பாடு

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் செயலி, இந்தியாவில் உள்ள 200மில்லியனுக்கும் அதிகமான தனது பயனர்களுக்காக புதிய வசதியை பரிசோதித்து வருகிறது. தனது தளத்தில் பரவும் அச்சுறுத்துட்டும் வதந்திகள்/தவறான தகவல்களை தடுப்பதை நோக்கமாக கொண்டு, இந்த புதிய வசதியில் பயனர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். வாட்ஸ்ஆப் செயலியில் வரும் இந்த மாற்றங்கள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் இங்கே காணலாம்.

'குயிக் பார்வேர்டு' பட்டன் நீக்கம்


இந்த வசதியின் ஒரு பகுதியாக, ஃசேட்டின் உள்ளே மீடியா பைல்(போட்டோ, வீடியோ அல்லது ஜிப்) பட்டன் அருகில் இருக்கும் 'குயிக் பார்வேர்டு' பட்டனை வாட்ஸ்ஆப் நீக்கவுள்ளது.

இந்தியாவில் மட்டும்

பார்வேர்டு மெசேஜ் அனுப்பும் எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதிக்கும் இந்த புதிய வசதியான இப்போதைக்கு இந்தியாவில் மட்டும் வெளியிடப்படுகிறது.


20 பார்வேர்ட் மெசேஜ்

வாட்ஸ்ஆப் செயலியின் உலக பதிப்பில், மற்ற குழுக்களுக்கு பார்வேர்டு செய்யும் மெசேஜ்களின் எண்ணிக்கை 20 என அந்நிறுவனம் கூறியுள்ளது.


முதலில் பீட்டா பதிப்பு


முதலில் இந்த வசதி ஆண்ராய்டு பீட்டா டெஸ்டர்களுக்கு கிடைக்கும் என வாட்ஸ்ஆப் கூறியுள்ளது. அதன் பின்னர், மற்ற பயனர்களுக்கு வெளியிடப்படும்.


சர்வர் சைட் மாற்றமில்லை


இந்த புதிய வசதியின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இதில் சர்வர் சைட் அப்டேட் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் சாதாரண ஆப் அப்டேட்டாக பீட்டா அல்லாத பயனர்களுக்கு இவ்வசதி கிடைக்கும்.


குரூப் சாட்டிற்கு இது பொருந்துமா?


இந்த வசதி எவ்வாறு செயல்படும் என பொறுத்திருந்து பார்க்கவேண்டும். புதிய வசதி தனி சாட் அல்லது க்ரூப் சாட் அல்லது இரண்டிற்கும் பொருந்துமா என தெளிவாக தெரியவில்லை.



இந்தியாவில் அதிக பார்வேர்டு மெசேஜ்


மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் தான் மக்கள் அதிகமாக மெசேஜ், போட்டோ மற்றும் வீடியோக்களை பார்வேர்ட் செய்கிறார்கள் என வாட்ஸ்ஆப் நிறுவனம் என ப்ளாக்கில் பதிவிட்டுள்ளது.


வாட்ஸ்ஆப் லேபிள் வசதியின் தொடர்ச்சி


வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் 'லேபிள்' வசதியின் ஒரு பகுதியாக இந்த வசதியும் கிடைக்கும். முற்றிலும் புதிய வசதியான லேபிள்-ல், வாட்ஸ்ஆப் பயனர்கள் ஒரு மெசேஜை பார்வேர்டு செய்யும் போது, மெசேஜின் மேல் பகுதியில் 'பார்வேர்டேட்'(forwarded)என்னும் வார்த்தை இருக்கும்

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு