Skip to main content

உங்கள் Smart TV மூலமாகவும் நீங்கள் கண்காணிக்க படலாம்!

மில்லியன் கணக்கில் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கருவிகள், பார்வையாளர் என்ன பார்க்கிறார்கள் என்பதை கண்காணித்து,
அதன் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து அவர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளை பரிந்துரைக்கலாம் அல்லவா!

ஆனால் இந்த தகவல்கள் விளம்பரதாரர்தளுக்கு விலைமதிப்பில்லாதவை. எனவே இவற்றை பயன்படுத்தி வீட்டில் உள்ள இணையத்தில் இணைக்கப்பட்ட மற்ற கருவிகள் மூலம் உங்களுக்கு ஏற்ற விளம்பரங்கள் மட்டும் அனுப்பப்படலாம்.
இது போன்ற மென்பொருளை கண்டறிந்துள்ள சாம்பா டிவி என்னும் நிறுவனம், உலகம் முழுக்க 14.4 மில்லியன் ஸ்மார்ட் டிவிக்களில் அவர்களின் மென்பொருள் இன்ஸ்டாஸ் செய்யப்பட்டுள்ள கூறியுள்ளது.
72 மில்லியன்

இதில் அதிர்ச்சியளிப்பது என்னவென்றால், அந்த மென்பொருள் வீட்டிலுள்ள வைஃபை உடன் இணைக்கப்பட்ட மற்ற கருவிகளை அணுக முடியும் என்பது தான்.
இதன் மூலம் தற்போது வரை சுமார் 72 மில்லியன் கருவிகளை சாம்பா டிவி நிறுவனம் தொடர்புகொள்ள முடிகிறது. இதன் மீதான மற்றொரு விமர்சனம் என்னவென்றால், வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகும் கூட இந்த கருவிகள் என்ன செய்கின்றன என அந்நிறுவனத்தால் கண்காணிக்க முடியும்.
சான்பிரான்சிஸ்கோ
சான்பிரான்சிஸ்கோ-வை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம், முதலீட்டாளர்களிடம் இருந்து 40மில்லியன் டாலர் முதலீட்டை திரட்டியுள்ளது. சோனி, சார்ப், பிலிப்ஸ் உட்பட சுமார் 12 டிவி உற்பத்தியாளர்களிடம் ஒப்பந்தம் வைத்துள்ள இந்நிறுவனம், சில மாடல்களில் தனது மென்பொருளையும் புகுத்தியுள்ளது.
சாம்பா
இந்த டிவிகளை வாங்குபவர்கள் முதல்முறையாக இன்ஸ்டால் செய்யும் போது, இந்நிறுவனத்தின் சாம்பா ஊடாடும் டிவி சேவையை செயலாக்கம் செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர்.
ஆன்-டிமாண்ட்
இந்த மென்பொருள் மூலம் ஸ்மார்ட் டிவி பார்வையாளரின் தனிப்பட்ட விருப்பத்தை அறிந்து, அதனடிப்படையில் தனிப்பட்ட பரிந்துரைகளை வழங்கமுடியும். இது பிராந்திய சேனல்கள், ஆன்-டிமாண்ட் வழங்குபவர்கள், அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ் அனைத்தும் உள்ளடக்கியது.மேலும் சாம்பா டிவி பார்வையாளர்களின் ஆன்-ஸ்கிரீன் பழக்கவழக்கத்தை பொறுத்து சிறப்பு சலுகைகளையும் வழங்குகிறது.

90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள்
90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த வசதியை பெற முடிவு செய்துவிட்ட நிலையில், இந்த வசதியை வழங்க எந்த எல்லைவரை தகவல்கள் சேகரிக்கப்படும் என பெரும்பாலானோர் புரிந்துகொள்ளவில்லை.
தொலைக்காட்சி திரையில் வரும் அனைத்தையும் நொடிக்கு நொடிக்கு கண்காணிக்கிறது இந்த மென்பொருள். இதன் மூலன் சேகரிக்கப்படும் தகவல்களை விளம்பரதாரர்களுக்கு அளித்து மக்கள் எந்தவித விளம்பரங்களை விரும்பி பார்க்கிறார்களே, அதை ஒளிபரப்புகின்றனர்.
மிகப்பெரிய குறை
இந்த மென்பொருளில் உள்ள மிகப்பெரிய குறை என்னவெனில், தொலைக்காட்டிகளை மட்டுமில்லாமல் இணையத்துடன் இணைக்கப்பட்ட வீட்டிலுள்ள அனைத்து பொருட்களையும் சாம்பா டிவி கண்காணிக்கிறது என்பது தான். இந்த தகவல்களின் மூலம் குறிப்பிட்ட அந்த விளம்பரங்கள் ஸ்மார்ட்போன், டேப்லெட்அல்லது பிற ஸ்மார்ட் ஹோம் பொருட்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு