Skip to main content

யூடியூப்’பில் வந்துள்ள Picture-in-Picture புது வசதி!

யூடியூப்பின் ரெட் சப்ஸ்கிரைபர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட வந்த பிப் (PiP) வசதி,
தற்போது அமெரிக்காவில் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான யூடியூப் கடந்த ஆண்டு ஆண்ட்ராய்டு ஓரியோ பயனர்களுக்கு பிப் எனப்படும் `Picture-in-Picture ' வசதியை அறிமுகம் செய்தது. அப்போது இந்தச் சேவையானது யூடியூப் ப்ரீமியம் பயனர்கள் மற்றும் ரெட் சப்ஸ்கிரைபர்களுக்கு மட்டுமே இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் ஆண்ட்ராய்டு ஓரியோ பயனர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த `Picture-in-Picture ' வசதியில் என்ன விசேஷம் என்றால் ஒரே சமயத்தில் இரு வீடியோக்களை பார்த்துக்கொள்ளலாம். ஆனால், சத்தம் பிரதான வீடியோவில் இருந்து மட்டுமே வரும். பிப் வசதியைப் பயன்படுத்த ஸ்மார்ட்போன் மற்றும் யூடியூப் செட்டிங்கில் பிப் ஆப்சனை ஆன் செய்து கொள்ள வேண்டும். ஒருமுறை இதனை ஆன் செய்துவிட்டு ஹோம் பட்டனை அழுத்திவிட்டால் பிப் மோட் தொடங்கிவிடும்.
தற்போது அமெரிக்காவில் இந்த வசதி அனைத்து ஆண்ட்ராய்டு ஓரியோ பயனர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருவதால், விரைவில் உலகம் முழுதும் உள்ள ஆண்ட்ராய்டு ஓரியோ பயனர்களும் இலவசமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு