Skip to main content

Nursing Course Application: முன்கூட்டியே வினியோகம்

பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கான விண்ணப்ப வினியோகத்துக்கு முன், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான விண்ணப்பம் வினியோகிக்கப்படுவதால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், வழக்கமாக, மருத்துவ சேர்க்கை முடிந்த பின், பி.எஸ்சி., நர்சிங்
படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் நடக்கும்.

அதன் பின், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான விண்ணப்பங்கள் வினியோகம் இருக்கும். இதனால், மருத்துவ இடம் கிடைக்காத மாணவர்கள், பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் சேருவர். அதிலும் இடம் கிடைக்காதவர்கள், டிப்ளமோ நர்சிங் படிப்பில் சேர்வர். ஆனால், இம்முறை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் முற்றிலும் நிறைவடையாத நிலையில், கடந்த, 22ம் தேதி முதல், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
கல்வியாளர்கள் கூறுகையில், 'மருத்துவ படிப்பு மற்றும் பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் இடம் கிடைக்காத மாணவர்கள் டிப்ளமோ படிப்பில் சேருவர். 'இதைக்கருத்தில் கொண்டே, மருத்துவ கவுன்சிலிங் முடிந்த பின் பி.எஸ்சி., நர்சிங் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. ஆனால், இம்முறை டிப்ளமோ நர்சிங் விண்ணப்பங்கள் முதலில் கொடுக்கப்படுவதால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்' என்றனர்.மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின்ஜோ கூறுகையில்,''தற்போது டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான விண்ணப்பங்கள் மட்டுமே வினியோகிக்கப்படுகின்றன. இது, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அதை மாற்ற முடியும். ''மருத்துவ கவுன்சிலிங் முடிந்த பின், பி.எஸ்சி., நர்சிங் சேர்க்கை நடத்துவதா அல்லது டிப்ளமோ நர்சிங் சேர்க்கை நடத்துவதா என, பின்னர் முடிவு செய்யப்படும். தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன,'' என்றார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா