Skip to main content

Nursing Course Application: முன்கூட்டியே வினியோகம்

பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கான விண்ணப்ப வினியோகத்துக்கு முன், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான விண்ணப்பம் வினியோகிக்கப்படுவதால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், வழக்கமாக, மருத்துவ சேர்க்கை முடிந்த பின், பி.எஸ்சி., நர்சிங்
படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் நடக்கும்.

அதன் பின், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான விண்ணப்பங்கள் வினியோகம் இருக்கும். இதனால், மருத்துவ இடம் கிடைக்காத மாணவர்கள், பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் சேருவர். அதிலும் இடம் கிடைக்காதவர்கள், டிப்ளமோ நர்சிங் படிப்பில் சேர்வர். ஆனால், இம்முறை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் முற்றிலும் நிறைவடையாத நிலையில், கடந்த, 22ம் தேதி முதல், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
கல்வியாளர்கள் கூறுகையில், 'மருத்துவ படிப்பு மற்றும் பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் இடம் கிடைக்காத மாணவர்கள் டிப்ளமோ படிப்பில் சேருவர். 'இதைக்கருத்தில் கொண்டே, மருத்துவ கவுன்சிலிங் முடிந்த பின் பி.எஸ்சி., நர்சிங் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. ஆனால், இம்முறை டிப்ளமோ நர்சிங் விண்ணப்பங்கள் முதலில் கொடுக்கப்படுவதால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்' என்றனர்.மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின்ஜோ கூறுகையில்,''தற்போது டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான விண்ணப்பங்கள் மட்டுமே வினியோகிக்கப்படுகின்றன. இது, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அதை மாற்ற முடியும். ''மருத்துவ கவுன்சிலிங் முடிந்த பின், பி.எஸ்சி., நர்சிங் சேர்க்கை நடத்துவதா அல்லது டிப்ளமோ நர்சிங் சேர்க்கை நடத்துவதா என, பின்னர் முடிவு செய்யப்படும். தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன,'' என்றார்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்