Skip to main content

உங்கள் போனை கட்டளையிட்டால் போதும், Google Duo Latest Update!

கூகுள் டூயோ புதிய அப்டேட்டின் ஒரு பகுதியாக கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் டேப்லெட் சென்டிரி இடைமுகம்(Tablet Centric Interface) அறிமுகம் செய்யப்படுகிறது. கூகுள் டூயோ, பிரபலமான அழைப்புப் பயன்பாடு செயலி இப்போது புதிய புதுப்பிப்பைப் பெற்றுள்ளது, இதை
பயனர்கள் கூகுள் அசிஸ்டன்ட் மூலம் அழைப்புகளை அழைக்க அனுமதிக்கிறது.



இப்போது கூகுள் அசிஸ்டன்ட் பயனர்கள், தொடர்பு மற்றும் அழைப்புக்கான குரல் கட்டளையைப் மட்டும் கூறினால் போதும். நீங்கள் கூகுள் அசிஸ்டன்ட் பயனாளர் என்றால், உங்கள் கூகுள் டூயோ செயலி மூலம் அழைப்பு செய்ய கால்(Video call) என்று சொல்லி உங்கள் நண்பர் பெயரை மட்டும் சொன்னால் போதும். கூகுள் டூயோ உங்கள் நண்பருடன் அழைப்பை உடனடியாக தொடங்கி விடும்.

உங்கள் நண்பர் கூகுள் டூயோ பயனாளர் இல்லாவிடின், அவர்களுக்கு ஹாங்கவுட்ஸ்(Hangouts) வழியாக தொடர்பு மற்றும் அழைப்புகளை இணைக்கின்றது இந்த புதிய அப்டேட்.
புதிய கூகுள் டூயோ அப்டேட் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு கிடைக்குமென்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. கூடுதலாக கூகுள் டூயோ ஒரே நேரத்தில் உங்களின் பல சாதனங்களில் எடுக்கும் விதம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
புதிய மேம்படுத்தலில் டப்ளேட் பயனாளர்களுக்காகவே புதிய வடிவமைப்பை கூகுள் டூயோ அப்டேட் செய்துள்ளது. டேப்லெட் சென்டிரி இடைமுகம்(Tablet Centric Interface) விரிவான திரையுடன் கூடிய கால் வசதியை முழு திரைக்கும் எடுத்துச் செல்கிறது. இந்த புதிய கூகுள் டூயோ அப்டேட் பயனாளர்களின் பயன்பாட்டு அனுபவத்தை சிறப்பாகியுள்ளது.

கூகுள் டூயோ பயன்பாட்டை மிக உயர்ந்த தரம் வாய்ந்த அழைப்பு செயலியாக விளம்பரப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு