Skip to main content

வாய்ஸ் மெசேஜுக்கு மாறும் லிங்க்டு இன்!

வாட்ஸ் அப், மெசெஞ்சர் உள்ளிட்ட செயலிகளில் மட்டுமே இருந்து வந்த வாய்ஸ் மெசேஜ் வசதி லிங்க்டு இன் செயலியிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.


மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மற்றொரு படைப்பான லிங்க்டு இன், தற்போது அதன் அடுத்த அப்டேட்டில் வாய்ஸ் மெசேஜ் சேவையை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய வசதி இன்னும் சில வாரங்களில் உலகம் முழுதும் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு மேலாளரான ஜாக் ஹென்ட்லின் அவரது பிளாக்கில், "இந்தச் செயலியை பயன்படுத்துபவர்கள் நடந்து கொண்டே பேசும்படி அல்லது மற்ற வேலைகளைச் செய்து கொண்டே எளிதில் சாட் செய்யும்படி வாய்ஸ் மெசேஜ் சேவை அறிமுகம் செய்ய உள்ளது. இனி பேச்சுகள் மூலம் எளிதில் உரையாடிக்கொள்ளலாம். உலகம் முழுதும் உள்ள லிங்க்டு இன் பயனர்களுக்காக, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மட்டுமின்றி இணையதளத்திலும் இந்த வசதி இன்னும் ஒருசில வாரங்களில் வெளியாகும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் வெளியான அப்டேட்டில் மெசேஜ் கம்போஸ் பாக்ஸின் அளவைத் திருத்தும் செய்துகொள்ளும் வசதி, க்ரூப் சாட்டில் ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் குறிப்பிட `@' என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் வசதி உள்ளிட்ட சில வசதிகளை அறிமுகம் செய்திருந்தது. மேலும் ஐஓஎஸ் பயனர்களுக்கு நியூஸ் ஃபீட்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்தியிருந்தது. அதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட நபரின் பெயரையோ, வேலை செய்யும் இடத்தையோ `செர்ச்' ஆப்சனில் சென்று தேடாமல் க்யூ.ஆர் கோடை கொண்டு எளிதில் அணுகும் க்யூ.ஆர் கோடு வசதியை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.




Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா