Skip to main content

வாய்ஸ் மெசேஜுக்கு மாறும் லிங்க்டு இன்!

வாட்ஸ் அப், மெசெஞ்சர் உள்ளிட்ட செயலிகளில் மட்டுமே இருந்து வந்த வாய்ஸ் மெசேஜ் வசதி லிங்க்டு இன் செயலியிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.


மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மற்றொரு படைப்பான லிங்க்டு இன், தற்போது அதன் அடுத்த அப்டேட்டில் வாய்ஸ் மெசேஜ் சேவையை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய வசதி இன்னும் சில வாரங்களில் உலகம் முழுதும் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு மேலாளரான ஜாக் ஹென்ட்லின் அவரது பிளாக்கில், "இந்தச் செயலியை பயன்படுத்துபவர்கள் நடந்து கொண்டே பேசும்படி அல்லது மற்ற வேலைகளைச் செய்து கொண்டே எளிதில் சாட் செய்யும்படி வாய்ஸ் மெசேஜ் சேவை அறிமுகம் செய்ய உள்ளது. இனி பேச்சுகள் மூலம் எளிதில் உரையாடிக்கொள்ளலாம். உலகம் முழுதும் உள்ள லிங்க்டு இன் பயனர்களுக்காக, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மட்டுமின்றி இணையதளத்திலும் இந்த வசதி இன்னும் ஒருசில வாரங்களில் வெளியாகும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் வெளியான அப்டேட்டில் மெசேஜ் கம்போஸ் பாக்ஸின் அளவைத் திருத்தும் செய்துகொள்ளும் வசதி, க்ரூப் சாட்டில் ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் குறிப்பிட `@' என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் வசதி உள்ளிட்ட சில வசதிகளை அறிமுகம் செய்திருந்தது. மேலும் ஐஓஎஸ் பயனர்களுக்கு நியூஸ் ஃபீட்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்தியிருந்தது. அதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட நபரின் பெயரையோ, வேலை செய்யும் இடத்தையோ `செர்ச்' ஆப்சனில் சென்று தேடாமல் க்யூ.ஆர் கோடை கொண்டு எளிதில் அணுகும் க்யூ.ஆர் கோடு வசதியை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.




Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு