Skip to main content

ஆசிய நாடுகளுக்கு செல்லும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை

ஆசிய நாடுகளுக்கு செல்லும் மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை கால சலுகை வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.


இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த திட்டத்தை மத்திய தனிநபர் பயிற்சித்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. இதற்கான அறிக்கை, உள்துறை, சுற்றுலா, விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் கருத்து கேட்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவாக பதில் அளிக்கும்படி கேட்டு கொண்டுள்ளோம்.
கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் ஊழியர்களுக்கு விடுமுறை கால பயண சலுகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய ஆசிய நாடுகளில் இந்தியாவின் பங்களிப்பை அதிகபடுத்தும் வகையில், இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நன்றி தினமலர்

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா