Skip to main content

புதிய உயர் கல்வி ஆணையம் மாநில உரிமையில் தலையிடாது'

''புதிதாக உருவாக்கப்படவுள்ள, உயர் கல்வி ஆணையம், சுதந்திரமான அமைப்பாக செயல்படும்; மாநிலங்களின் உரிமையில் தலையிடும் வகையில்,

இந்த அமைப்பின் செயல்பாடு இருக்காது' என, மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.உயர் கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் அமைப்பான, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழுவுக்கு பதில், புதிதாக, உயர் கல்வி ஆணையத்தை அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, உயர் கல்வி ஆணைய சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

3.5 கோடி : இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், லோக்சபாவில் நேற்றுகூறியதாவது: யு.ஜி.சி., அமைப்பு, 1956ல், துவங்கப்பட்டபோது, 20 பல்கலைகள், 500 கல்லுாரிகள் இருந்தன. அவற்றில், இரண்டு லட்சம் மாணவர்கள் படித்தனர். தற்போது, 900 பல்கலைகளும், 40 ஆயிரம் கல்லுாரிகளும் உள்ளன; 3.5 கோடி மாணவர்கள் படிக்கின்றனர்.எனவே, தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ப புதிய அமைப்பு தேவைப்படுகிறது. இதற்காக உருவாக்கப்படும், உயர் கல்வி ஆணையம், சுதந்திரமாக செயல்படும்; மாநில அரசுகளின் அதிகாரங்களில் தலையிடும் அமைப்பாக, இது செயல்படாது.எஸ்.சி., - எஸ்.டி.,மற்றும் இதர பிற்பட்டோர் பிரிவினருக்கு ஏற்கனவே அமலில் உள்ள ஒதுக்கீடுகளில் மாற்றம் இருக்காது.

இறுதி பணி : புதிய அமைப்பு, உயர் கல்வி துறையில் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும்.புதிய அமைப்பு தொடர்பாக, சம்பந்தப்பட்டோரிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் அடிப்படையில், சட்ட திருத்த மசோதாவுக்கான வரைவை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு