Skip to main content

இளம் படைப்பாளர் விருது’ ஆகஸ்ட் இறுதிக்குள் போட்டி

தமிழகத்தில் ‘இளம்படைப்பாளர் விருது’க்கான போட்டி ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் நடத்த பொதுநூலக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்

தமிழகத்தில் நூலகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் சிந்தனை திறன், பேச்சாற்றல், எழுத்தாற்றலை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் கவிதைப்போட்டி நடத்த வேண்டும். இதில் ஒவ்வொரு போட்டியிலும் 6 முதல் 8ம் வகுப்பு வரை ஒருபிரிவும், 9 முதல் 12ம் வகுப்பு வரை ஒரு பிரிவும் பங்கேற்கலாம்
ஒவ்வொரு பிரிவிலும் ஒரு பள்ளியிலிருந்து ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்
போட்டியில் பங்கேற்பவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் அனுமதி கடிதம் பெற்றிருக்க வேண்டும். தாலுகா அளவிலான ஏதேனும் ஒரு பள்ளியில் போட்டி நடத்த வேண்டும். தமிழ்புலமை கொண்டவர்களை கொண்டு தேர்வு குழு அமைக்க வேண்டும்
தாலுகா அளவில் முதல் 2 இடங்களில் வெற்றி பெற்றவர்களை தேர்தெடுத்து மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்த வேண்டும்

ஒவ்வொரு போட்டியிலும் 3 இடங்களை பெற்றவர்களை தேர்வு செய்து மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்ற 18 மாணவர்களுக்கு இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும்
இதில் பேச்சுப்போட்டி: ‘வாழ்விற்கு உயர்வு தருவது வாசிப்பே’. கட்டுரைப்போட்டி: ‘வாசித்தேன் வளர்ந்தேன்’. கவிதைப்போட்டி: ‘என் எதிர்காலம் என்கையில்’ ஆகிய தலைப்புகளில் நடத்த வேண்டும்
இந்த தலைப்புகளில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நூலகர்கள் வரும் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் போட்டிகள் நடத்தி முடிக்க வேண்டும். 

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு