Skip to main content

இனி Balance இல்லாமலும் Call செய்யலாம்: BSNL அதிரடி!

இணையம் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியினை BSNL அறிமுகம் செய்துள்ளது

இந்தியாவில் முதல் முறையாக, இணையம் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியினை BSNL அறிமுகம் செய்துள்ளது!
மொபைல் டேட்டா எனப்படும் இணைய டேட்டாவினை பயன்படுத்தி, BSNL மொபைல் எண்களின் மூலம் இந்தியாவில் இருக்கும் எந்த ஒரு மொபைல் எண்ணுக்கும் அழைப்புகளை ஏற்படுத்தும் வசதியினை BSNL அறிமுகம் செய்துள்ளது.
BSNL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியான Wings என்னும் செயலியின் மூலம் இணைய வசதிகளை (Wifi, Mobile Data) கொண்டு பிற நெட்வொர்கள் எண்களுக்கு அழைப்புகளை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இணைய வசதியினை கொண்டு பிரத்தியேக செயலிகள் மூலம் அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டது, ஆனால் அந்த அழைப்புகளின் இருப்புறமும் குறிப்பிடப்பட்ட செயலி அவசியமாக கருதப்பட்டது, ஆனால் இந்த Wings செயலியின் மூலம் மொபைல் எண்ணில் மூலமே அழைப்புகளை ஏற்படுத்தலாம்.

இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்து பேசிய தொலைத் தொடர்பு அமைச்சர் மனோஜ் குமார் தெரிவிக்கையில்... இந்த முயற்சியை மேற்கொண்டுள்ள BSNL நிறுவனத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இந்த Wings செயலியில் பதிவு செய்துக்கொள்ள இந்த வாரம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் எனவும், வரும் ஜூலை 25-ஆம் நாள் முதல் இந்த வசதி செயல்பாட்டுக்கு வரும் எனவும் BSNL நிறுவனம் அறிவித்துள்ளது!

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா