Skip to main content

புதிய மின் இணைப்பு வைப்புக் கட்டணம் 5 சதவிகிதம் உயரும்: அமைச்சர் தகவல்

சென்னை, ஜூலை 8 புதிதாக மின் இணைப்புப் பெறுவதற்கு 5 சதவீதம் மட்டுமே வைப்புத் தொகை உயர்த்தப் படவுள்ளது. ஆனால், மின் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.


மின் கட்டணம் மற்றும் வைப்புத்தொகை உயர்த்தப்படவுள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், மாநிலத்தில் புதிதாக மின் இணைப்பு பெறுவதற்கு 5 சதவீதம் மட்டுமே வைப்புத் தொகை உயர்த்தப்படும். அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. ஆனால், மின் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு இளநிலைப் பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு 960 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். ஆகஸ்ட் மாதத்தில் இப் பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்ட பிறகு, மின் வாரியத்துக்கு மின்மாற்றிகள் உற்பத்தி செய்வதற்கான தாமிரம் பற்றாக்குறை எதுவும் இல்லை. வேறு இடங்களில் இருந்து அவை கொள்முதல் செய்யப்படுகின்றன. எனவே, தற்போது மின்மாற்றிகள் தேவையான அளவு உற்பத்தி செய்ய முடிகிறது என்றார்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு