Skip to main content

309 டெக்னிக்கல் எஸ்.ஐ., பணி ஆக.10 க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய குழுமம் சார்பில், 309 டெக்னிக்கல் எஸ்.ஐ.,பணியிடங்களுக்கு இன்று (ஜூலை 11) முதல் இருபாலரும் ஆன்லைனில் (tnusrbonline.org) விண்ணப்பிக்கலாம். போலீஸ் துறையில் பணியாற்றுபவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு உண்டு. ஆக.,10ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.


விண்ணப்பிப்பவர்கள் 2018 ஜூலை 1 ல் 20 வயது நிரம்பியவராகவும், 28 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். (1990 ஜூலை 1 அல்லது அதற்கு பின் பிறந்தவர், 1998 ஜூலை 1 அல்லது அதற்கு முன் பிறந்தவர்). பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வயது உச்ச வரம்பு 30 வயது. ஆதிதிராவிடருக்கு 33 வயது, விதவைகளுக்கு 35 வயது, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் போலீஸ் துறையில் உள்ளவர்களுக்கு 45 வயது இருக்கலாம்.
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி வாரியத்தால் வழங்கப்பட்ட மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பு பொறியியல் பட்டய படிப்பில் குறைந்தபட்சம் 2ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தேசிய தொழில்நுட்ப கல்வி குழுவால் அங்கீகரிக்கப்பட்ட மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பு பொறியியல் பட்டம் ( பி.டெக்.,- பி.இ.,) பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம் 500 ரூபாய். மேலும் விபரங்களை சீருடை தேர்வாணைய இணையதளத்தில் பார்க்கலாம்

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு