Skip to main content

வரும், 27ல் பூமிக்கு அருகில் செவ்வாய் : விண்ணில் ஓர் அரிய நிகழ்வு

பூமியின் வெளிப்புற கோள்களில் ஒன்றான, செவ்வாய் கோள், 15 ஆண்டுகளுக்கு பின், பூமிக்கு மிக அருகே வருகிறது. இதை பார்க்க, பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இது
குறித்து, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் பொறுப்பு செயல் இயக்குனர், சவுந்தரராஜ பெருமாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பூமியின் ஆறு வெளிப்புற கோள்களில் ஒன்றான செவ்வாயை, 26 மாதங்களுக்கு ஒரு முறை, பூமி கடந்து செல்லும்.அப்போது, செவ்வாய்க்கு நேரே உள்ள நீள்வட்ட பாதையில், பூமி இருக்கும். பூமியை விட, நீண்ட வட்ட பாதையில், செவ்வாய் சுழலும் என்பதால், இரண்டு கோள்களுக்கும் இடையிலான துாரம், ஒவ்வொரு நேரமும் மாறுபடும்.இதன்படி, வரும், 27ல், செவ்வாய் மற்றும் பூமிக்கு இடையே, எதிர் அமைவு ஏற்படுகிறது. இதில், வரும், 31ல், பூமியின் அருகே, செவ்வாய் நெருங்கி வரும்.அப்போது, இரண்டு கோள்களுக்கும் இடையிலான துாரம், 5.76 கோடி கிலோ மீட்டராக இருக்கும். 

வழக்கமாக, செவ்வாய் கோளுக்கும், பூமிக்கும் இடையிலான துாரம், 38 கோடி கிலோ மீட்டராக இருக்கும்.ஆனால், எப்போதாவது தான், மிகவும் அரிதாக. 5.5 கோடி கி.மீ., வரை செவ்வாய் நெருங்கும்.இதற்கு முன், 2003, ஆக.,27ல், 5.5 கோடி கி.மீ., துாரத்தில், பூமியை செவ்வாய் நெருங்கி வந்தது.தற்போது, வரும், 31ல் வரவுள்ளது. அப்போது, செவ்வாயின் தோற்ற அளவு, 24.3 கோண வினாடிகளாக இருக்கும். அத்துடன், செவ்வாய் சற்று பெரிதாகவும், ஒளியுடனும் காணப்படும்.
இந்த நிகழ்வு மீண்டும், 2035 செப்., 15ல் தான் ஏற்படும். அதேபோல், பூமிக்கு நேரே, செவ்வாய் எதிரமைவது 2016, மே, 22ல் நிகழ்ந்தது. அப்போது, செவ்வாய், 7.6 கோடி கி.மீ., துாரத்தில் இருந்தது. இந்த எதிரமைவு அடுத்து, 2020 அக்., 13ல் தான் நிகழும்.எனவே, இந்த அரிய நிகழ்வை, சென்னை, பிர்லா கோளரங்கம், பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், வரும், 25 முதல், 31 வரை, மாலை, 7:00 முதல், இரவு, 9:00 மணி வரை,பொது மக்கள் பார்க்க,தொலைநோக்கியுடன் சிறப்பு வசதிகள்


செய்யப்பட்டுள்ளன

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு