Skip to main content

வீட்டுக்கடன் ரூ.100 கோடி வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு ஒப்புதல்

தமிழகத்தில், ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு, 100 கோடி ரூபாய் அளவுக்கு, வீட்டுக்கடன் வழங்க, கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


தமிழகத்தில், ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு, நியாயமான விலையில், வீடுகள் மற்றும் மனைகள் கிடைப்பதற்காக, 733 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் துவக்கப்பட்டன. இதில், 688 சங்கங்கள், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத்துடன் இணைந்துள்ளன. இவற்றில், 28 சங்கங்கள் வாயிலாக, 2017 - 18ல், 537 உறுப்பினர்களுக்கு, 30 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், தவணை தொகை வசூலிப்பது, 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் வாயிலாக, ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு, 100 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சங்கங்களின் செயல்பாடுகள் அடிப்படையில், அவற்றின் உறுப்பினர்கள் பலன் பெறுவர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா