Skip to main content

வீட்டுக்கடன் ரூ.100 கோடி வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு ஒப்புதல்

தமிழகத்தில், ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு, 100 கோடி ரூபாய் அளவுக்கு, வீட்டுக்கடன் வழங்க, கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


தமிழகத்தில், ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு, நியாயமான விலையில், வீடுகள் மற்றும் மனைகள் கிடைப்பதற்காக, 733 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் துவக்கப்பட்டன. இதில், 688 சங்கங்கள், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத்துடன் இணைந்துள்ளன. இவற்றில், 28 சங்கங்கள் வாயிலாக, 2017 - 18ல், 537 உறுப்பினர்களுக்கு, 30 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், தவணை தொகை வசூலிப்பது, 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் வாயிலாக, ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு, 100 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சங்கங்களின் செயல்பாடுகள் அடிப்படையில், அவற்றின் உறுப்பினர்கள் பலன் பெறுவர்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு