Skip to main content

பிளஸ் 1 புதிய பாடத்திட்டத்தில், காலாண்டு,

அரையாண்டு தேர்விற்கான பாடப்பகுதிகளை வெளியிடாததால், மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.


தமிழக பள்ளிக்கல்வித்துறையில், பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழக பாடத்திட்ட மாணவர்கள் நுழைவு தேர்வை எதிர்கொள்ளும் வகையில், பிளஸ் 1ல், பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பொதுத்தேர்வு வினாத்தாளில், 20 சதவீத அளவுக்கு, மாணவர்களின் சிந்தனை திறனை பரிசோதிக்கும் கேள்விகள் இடம் பெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுத்தேர்வுக்கான, வினாத்தாள் கட்டமைப்பு என்ற, 'ப்ளூ பிரின்ட்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நுழைவு தேர்வுகளுக்கு ஏற்ப, பாடத்திட்டங்களும் மாற்றப்பட்டுள்ளன.
இதன்படி, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம், இந்த ஆண்டு முதல் அறிமுகமாகி உள்ளது. இந்த பாடத்திட்டப்படி, பாடம் நடத்தும் முறைகள் குறித்து, சமீபத்தில் தான், கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த கருத்தாளர்கள், வரும் வாரங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர். இதுவரை பயிற்சி இல்லாததால், பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதனிடையே, புதிய பாடத்திட்டத்தில், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கான பாடப்பகுதிகள் என்னவென்று, பள்ளி கல்வித்துறை இன்னும் அறிவிக்கவில்லை.அதனால், சரியான வழிகாட்டுதல் இல்லாமல், எந்த பாடங்கள் வரையிலும் தேர்வுகள் நடத்தப்படும்; அதற்கான வினாக்கள் எப்படி இருக்கும் என, மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

எனவே, புதிய பாடத்திட்டத்தில், பருவ தேர்வுகளுக்கான பாடப்பகுதிகளை, பள்ளிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என, மாணவர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளன

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்