Skip to main content

JIO - மாபெரும் அறிவிப்பு ..! "500 ரூபாயில் 5 வருடத்திற்கு இலவச தொலைக்காட்சிசேவை"..!

ஜியோ மூலம் பல சரவெடி அதிரடி சலுகைகளை வழங்கி வந்த ரிலையன்ஸ் தற்போது அட்டகாச அறிவிப்பை வழங்கி மக்களைமகிழ்ச்சி வெள்ளத்தில் குளிக்க வைத்துள்ளது.

செட்டாப் பாக்ஸ்
செல்போன் சேவையை போன்றே செட் ஆப் பாக்ஸ் மூலம் தொலைக்காட்சியை பார்க்க கூடிய சூழல் தற்போது நிலவி வருகிறது..இதற்கு முன்னதாக, கேபிள் டிவி மூலம் மட்டும் மக்கள் படம் பார்த்து வந்தனர்.பின்னர் தனியார் நிறுவனங்கள் செட் ஆப் பாக்ஸ் மூலம் செல்போன் சேவை வழங்குவது போன்றே நல்ல தரமான முறையில் பல சேனல்களை பார்க்கும் வசதியை கொடுத்தது.

தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் செட்டாப் பாக்ஸ் உடன் தொலைக்காட்சி சேவையை 5 வருடத்துக்கு 500 ரூபாய் மட்டுமே என்ற அதிரடி ஆபர் அறிவித்துள்ளது என்றால் பாருங்களேன்....ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ மூலம் பல அதிரடி சலுகைகளை வழங்கியதில் மற்ற நிருவனங்கள் ஜியோ உடன் போட்டி போட முடியாமல் திணறிவருகிறதுஅந்த வரிசையில் ஏர்செல் நிறுவனம் ஜியோ உடனான போட்டியை சமாளிக்க முடியாமல் திவாலானது என்பது குறிப்பிடத்தக்கதுரிலையன்ஸ் செட்டாப்பாக்ஸ்அதன்படி, தற்போது ஒரு வருடத்துக்கு ஹெச்டி சேனல்கள் உட்பட மொத்தம் 500 சேனல்களை அடுத்த 1 ஆண்டுக்கு ஃப்ரீ டு ஏர் (எஃப்டிஏ) மூலம் இலவசமாக வழங்க ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுஅதுமட்டுமில்லாமல், அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு வெறும் 500 ரூபாயில் சேவையை வழங்க முடிவு செய்து உள்ளது.இந்த அற்புத சேவையைபாமர மக்கள் மிகவும் பயனடைவார்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.

இதற்கு முன்னதாக ஜியோ இலவச சேவை வழங்கும் போது அமோக வரவேற்பை பெற்றதற்கு காரணம், முதல் மூன்று மாதம் காலம் முற்றிலும் இலவச சேவை என ஜியோ அறிவித்ததே....இதே போன்று தற்போது செட் ஆப் பாக்ஸ் விஷயத்தில் ஒரு வருடம் இலவசம் என்று அறிவித்து உள்ளதால், மற்ற நிறுவனங்களின் நிலைமை என்னவாகும் என்பதில் கேள்விகுறி எழுந்துள்ளது

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு