Skip to main content

உறுதியாகாத இ - டிக்கெட்தாரர் இனி ரயில்களில் பயணிக்கலாம்!

புதுடில்லி:'இணையதளம் மூலம், 'இ - டிக்கெட்' பெற்று, காத்திருப்பு பட்டியலில் உள்ளோர், ரயில்களில், டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணியர் வராத பட்சத்தில், படுக்கை வசதி உள்ள, அவர்களின்
இருக்கைகளை பயன்படுத்தலாம்'
என்ற, டில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.பாரபட்சம்காத்திருப்பு பட்டியலில் உள்ள, இ - டிக்கெட் பயணியர், டிக்கெட் உறுதி செய்யப்படாவிட்டால், ரயிலில் பயணிக்க முடியாது; அதேசமயம், ரயில்வே கவுன்டரில் டிக்கெட் பெற்று, காத்திருப்பு பட்டியலில் இருந்தால், அத்தகைய பயணியரை, ரயிலில் பயணிக்க அனுமதிக்கும் நிலை இருந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், 2014, ஜூலையில் அளித்த தீர்ப்பில், 'காத்திருப்பு பட்டியலில் உள்ள, இ - டிக்கெட் பயணியர், கவுன்டரில் டிக்கெட் பெற்ற பயணியர் இடையே, பாரபட்சம் பார்க்கக் கூடாது.'இரு வகை பயணியரும், ரயிலில், உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்துள்ள பயணியர் வராத பட்சத்தில், அந்த இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்' எனக் கூறப்பட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், ரயில்வே சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இரு முறை விசாரணைக்கு வந்தபோதும், ரயில்வே சார்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை.உத்தரவுஇதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதி, மதன் பி.லோகுர் தலைமையிலான அமர்வு, டில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, நேற்று உத்தரவு பிறப்பித்தது. ரயில்வேயின் மனுவை தள்ளுபடி செய்வதாக, நீதிபதிகள் அறிவித்தனர்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு