Skip to main content

ஜியோவின் அதிரடி ஆஃபர்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களை திக்குமுக்காடச் செய்யும் வகையில் பல்வேறு அதிரடி சலுகைகளை இன்று அறிவித்துள்ளது.

இதன்படி, வழக்கமாக நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி இலவசமாக வழங்கப்பட்டுவந்தநிலையில், இனி கூடுதலாக 1.5ஜிபி வழங்கப்படுகிறது. அதாவது,நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த சலுகை இன்று முதல்(12ம்தேதி) வரும் 30-ம்தேதி வரை தொடரும்.


இதன்படி ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.149, ரூ.349, ரூ.399, ரூ.449 ஆகிய தொகைக்கு ரீசார்ஜ் செய்தால், வழக்கமாக வழங்கப்படும் நாள்தோறும் 1.5ஜிபி (4ஜி)டேட்டாவோடு கூடுதலாக 1.5ஜிபி டேட்டா வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக நாள்ஒன்றுக்கு 4ஜி வேகத்தில் 3ஜிபி டேட்டாவழங்கப்படும்.

சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் ரூ.149-க்கும், ரூ.399க்கும் நாள் தோறும் 1ஜிபி டேட்டா என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. அதற்குப் போட்டியாக ஜியோ இன்று இந்தசலுகையை அறிவித்துள்ளது.

ரூ.198, ரூ,398, ரூ.448 மற்றும் ரூ.498க்கு ரீசார்ஜ் செய்து, நாள்தோறும் இலவசமாக 2ஜிபி(4ஜி) டேட்டா பெறும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் இனி நாள்தோறும் 4ஜிவேகத்தில் 3.5ஜிபி டேட்டா இலவசமாக பெறுவார்கள்.ரூ.299க்கு ரீசார்ஜ் செய்தால்,வழக்கமாக 3ஜிபி டேட்டா மட்டுமே நாள்தோறும் கிடைக்கும். 


இனி நாள்தோறும் 4.5ஜிபிடேட்டாவை 4ஜிவேகத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோல, ரூ.509க்கு ரீசார்ஜ் செய்தால், நாள்தோறும் 4ஜிபி டேட்டா வழங்கப்படுவதற்குப் பதிலாக கூடுதலாக 1.5ஜிபி சேர்த்து 5.5 ஜிபிடேட்டா 4ஜி வேகத்தில் வழங்கப்படும்.ரூ.799-க்கு ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு நாள்தோறும் 6.5 ஜிபி டேட்டாவும் இலவசமாக வழங்கப்படும். இதுதவிர இலவச வாய்ஸ்கால், எஸ்எம்எஸ், ஜியோ ஆப்ஸ் பயன்பாடும் அளிக்கப்படுகிறது.

இதுதவிர ரூ.300 மற்றும் அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 தள்ளுபடியும், ரூ.300க்கு குறைவாக ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும் தரப்படுகிறது. ஆனால், இந்த ரீசார்ஜ் ஜியோ ஆப்ஸ், அல்லது போன்பே ஆப்ஸ் மூலம் செய்யப்பட வேண்டும்.ஜியோ ஆப்ஸில் ரூ.149க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.120 செலுத்தினாலே போதுமானது. இந்தவாடிக்கையாளர்களுக்கு நாள்தோறும் 3 ஜிபி இலவச டேட்டா உள்ளிட்ட 28 நாட்களுக்கு 84 ஜிபி 4ஜிவேகத்தில் இலவசமாக வழங்கப்படும்.ரூ.399க்கு ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்களுக்கு 252 ஜிபி வழங்கப்படும்.


இவ்வாறு ஜியோ நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா