Skip to main content

இன்று முதல் பிளஸ் 1 விடைத்தாள் நகல்

'பிளஸ் 1 விடைத்தாள் நகல் கேட்டவர்கள், இன்று முதல், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.பிளஸ் 1 பொது தேர்வில், மதிப்பெண்ணில் சந்தேகம் உள்ளவர்கள், விடைத்தாள்
நகல் பெற வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று பிற்பகல் முதல், scan.tndge.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். விடைத்தாள் நகல் பெற்றவர்கள், அதை ஆய்வு செய்த பின், மறுகூட்டலோ, மறுமதிப்பீடோ தேவைப்பட்டால், அதே இணையதளத்தில் உள்ள, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன், 20 முதல், 22க்குள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா