Skip to main content

NEET : ப்ளஸ் டூ மதிப்பெண் கணக்கில் வருமா? நீட் மதிப்பெண் மட்டுமே தீர்மானிக்குமா

1) தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரின் பட்டியல் எடுத்துக் கொள்ளப் படும்.

2) இந்தப் பட்டியலில் இருந்து +2ல் தோல்வி அடைந்தவர்கள் இருந்தால் அவர்களின் பெயர்கள் நீக்கப்படும்.
3) அடுத்து,இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும், ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 40 சதம் மதிப்பெண் பெறாத SC/ST/OBC
மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.
அதுபோல 50 சதம் மதிப்பெண் பெறாத பொதுப்பிரிவு (unreserved) மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.
4) இவ்வாறு தகுதி பெறாதவர்களை நீக்கிய பிறகு மீதம் உள்ளவர்களின் தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆயத்தமாக இருக்கும்.
இந்தப் பட்டியல் ELIGIBILITY உள்ளவர்களின் பட்டியல் ஆகும்.
5) அடுத்து, மேற்கூறிய பட்டியலில் இருந்து, நீட் தேர்வில் தகுதி பெறாத (not qualified) மாணவர்களின் பெயர்கள் நீக்கப் பட்டு, நீட்டில் தகுதி பெற்ற (QUALIFIED) மாணவர்களின் மதிப்பெண்கள் பதியப்பெற்ற பட்டியல் தயாரிக்கப் படும்.
6)(SC/ST/OBC பிரிவின் QUALIFYING தகுதி: 40th percentile ஆகும். பொதுப்பிரிவின் QUALIFYING தகுதி: 50th percentile ஆகும்.) PERCENTILE வேறு, PERCENTAGE வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
7) பத்தி 5இல் கூறிய பட்டியலே மிகவும் முக்கியமான பட்டியல் ஆகும். இப்பட்டியலில் நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் தரவரிசை (RANK) அடிப்படையில் பதியப்படும்.
8) இந்தப் பட்டியல் தயாரிக்கப் படும்போது, தமிழகத்தில் உள்ள 69 சத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்.
9) அதாவது, தமிழகத்தில் சுமார் 3000 MBBS இடங்கள் என்று வைத்துக் கொண்டால், இந்த 3000 இடங்களில் 69 சதமுள்ள இடங்கள் SC/ST/OBCக்கும் மீதியுள்ள
31 சத இடங்கள் பொதுப்பிரிவினரைக் கொண்டும் தயாரிக்கப் படும்.
10) இதுவரை கூறிய அனைத்தும் தமிழ் நாட்டுக்குரிய 85 சதம் இடங்களுக்கானது என்பதை வாசகர்கள் கவனம் கொள்ள வேண்டும். எனவே இந்த இடங்களைப் பெறுவதற்கு, மாணவர்கள் இரண்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
அ) மாணவர்கள் தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும். (domicile status: Tamilnadu)
ஆ) மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மேநிலைப் பள்ளிகளில் ப்ளஸ் டூ படித்து இருக்க வேண்டும்.
11) இப்படித்தான் MBBS அட்மிஷன் நடைபெறும்.
12) இங்கு மாணவர் என்பது மாணவியர் மற்றும் மூன்றாம் பாலினத்தவரையும் குறிக்கும்.
13) பொதுப்பிரிவு உடல் ஊனமுற்றோருக்கு முன்னர்க்கூறிய 50 சத மதிப்பெண்கள் என்பது 45 சதம் ஆகும்.
14) இப்படித்தான் MBBS அட்மிஷன தெளிவாகவே நடை பெறுகிறது!!!
குழப்பம் தேவையில்லை!

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்