Skip to main content

அனிமேஷன் பொம்மைகளை கொண்டு வழி காட்டும் கூகுள் மேப்ஸ்

கூகுள் I/O 2018 நிகழ்வில் மேப்ஸ் செயலியில் சேர்க்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள் விவரிக்கப்பட்டன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் புதிய அம்சங்கள் புதிய அப்டேட் மூலம் செயலியில் சேர்க்கப்பட இருக்கின்றன. 


அந்த வகையில் கூகுள் மேப்ஸ் செயலியில் விஷூவல் பொசிஷனிங் சிஸ்டம் எனும் உதவியோடு இயங்கும் சுவாரஸ்ய அம்சம் விவரிக்கப்பட்டது. விஷூவல் பொசிஷனிங் சிஸ்டம் உங்களது ஸ்மார்ட்போன் கேமரா உதவியுடன் கூகுள் மேப்ஸ் செயலியில் இணைந்து நீங்கள் முகவரி தெரியாத இடங்களில் பயணிக்கும் போது துல்லியமாக வழிகாட்டும்.

இத்துடன் கூகுள் மேப்ஸ் இன்டர்ஃபேஸ் கேமராவுடன் இணைந்து வேலை செய்யும் படி உருவாக்கப்படுகிறது. இதனால் திசை தெரியாத இடங்களில் கேமராவை காண்பித்தால் அம்பு குறி மூலம் நீங்கள் செல்ல வேண்டிய திசையை உங்களுக்கு காண்பிக்கும். 

இந்த அம்சம் நீங்கள் செல்லும் தெருக்களில் உள்ள கடைகளின் விளம்பர பலகைகளை கேமரா மூலம் அறிந்து கொண்டு நீங்கள் செல்ல வேண்டிய வழியை காண்பிக்கும். இத்துடன் அனிமேஷன் பொம்மைகளையும் மேப்ஸ் செயலியில் சேர்ப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூகுள் அதிகாரி தெரிவித்துள்ளார். 

இந்த பொம்மை நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். வழக்கமாக நீல நிற அம்பு குறி உங்களுக்கு இதுவரை வழிகாட்டிய நிலையில், இனி கம்ப்யூட்டரில் உருவான வித்தியாசமான பொம்மைகள் வழிகாட்டும். இது புதுவித அனுபவத்தை வழங்குவதோடு முகவரி தெரியாத இடங்களில் டிஜிட்டல் துணையாக விளங்கும். 
இதுமட்டுமின்றி கூகுள் மேப்ஸ் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட இருக்கின்றன. இவை மேப்ஸ் பயன்பாட்டை முற்றிலும் மாற்றுவதோடு, புதிய அனுபவத்தையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் மேப்ஸ் சேவையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய அம்சங்கள் வரும் மாதங்களில் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா