Skip to main content

அனிமேஷன் பொம்மைகளை கொண்டு வழி காட்டும் கூகுள் மேப்ஸ்

கூகுள் I/O 2018 நிகழ்வில் மேப்ஸ் செயலியில் சேர்க்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள் விவரிக்கப்பட்டன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் புதிய அம்சங்கள் புதிய அப்டேட் மூலம் செயலியில் சேர்க்கப்பட இருக்கின்றன. 


அந்த வகையில் கூகுள் மேப்ஸ் செயலியில் விஷூவல் பொசிஷனிங் சிஸ்டம் எனும் உதவியோடு இயங்கும் சுவாரஸ்ய அம்சம் விவரிக்கப்பட்டது. விஷூவல் பொசிஷனிங் சிஸ்டம் உங்களது ஸ்மார்ட்போன் கேமரா உதவியுடன் கூகுள் மேப்ஸ் செயலியில் இணைந்து நீங்கள் முகவரி தெரியாத இடங்களில் பயணிக்கும் போது துல்லியமாக வழிகாட்டும்.

இத்துடன் கூகுள் மேப்ஸ் இன்டர்ஃபேஸ் கேமராவுடன் இணைந்து வேலை செய்யும் படி உருவாக்கப்படுகிறது. இதனால் திசை தெரியாத இடங்களில் கேமராவை காண்பித்தால் அம்பு குறி மூலம் நீங்கள் செல்ல வேண்டிய திசையை உங்களுக்கு காண்பிக்கும். 

இந்த அம்சம் நீங்கள் செல்லும் தெருக்களில் உள்ள கடைகளின் விளம்பர பலகைகளை கேமரா மூலம் அறிந்து கொண்டு நீங்கள் செல்ல வேண்டிய வழியை காண்பிக்கும். இத்துடன் அனிமேஷன் பொம்மைகளையும் மேப்ஸ் செயலியில் சேர்ப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூகுள் அதிகாரி தெரிவித்துள்ளார். 

இந்த பொம்மை நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். வழக்கமாக நீல நிற அம்பு குறி உங்களுக்கு இதுவரை வழிகாட்டிய நிலையில், இனி கம்ப்யூட்டரில் உருவான வித்தியாசமான பொம்மைகள் வழிகாட்டும். இது புதுவித அனுபவத்தை வழங்குவதோடு முகவரி தெரியாத இடங்களில் டிஜிட்டல் துணையாக விளங்கும். 
இதுமட்டுமின்றி கூகுள் மேப்ஸ் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட இருக்கின்றன. இவை மேப்ஸ் பயன்பாட்டை முற்றிலும் மாற்றுவதோடு, புதிய அனுபவத்தையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் மேப்ஸ் சேவையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய அம்சங்கள் வரும் மாதங்களில் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு