Skip to main content

கல்வித்துறை நிர்வாக மாற்றத்தால் அதிகார போட்டி

தொடக்கப் பள்ளியில் ஏற்பட்டுள்ள நிர்வாக மாற்றத்தால், அதிகார மையங்களுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது. யாருடைய பேச்சை கேட்பது என, அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழக அரசு, கற்றல், கற்பித்தல் மற்றும் பாடத் திட்டத்திலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல், ஆசிரியர்கள் இடமாறுதல், பணி நியமனம், பயிற்சி மற்றும் கல்வித் துறையின் இடமாறுதல்களிலும், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், இரண்டு நாட்களுக்கு முன், புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

குளறுபடி:
'நிர்வாக முறையை நீண்ட சுற்றலில் விடும் வகையில், புதிய அரசாணை அமைந்துள்ளது. இதனால், நிர்வாகத்தில் குளறுபடிகள் ஏற்படும்' என, அதிகாரிகள் மட்டத்திலும், ஆசிரியர் சங்கங்கள் மத்தியிலும் அதிர்ச்சியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது. புதிய அரசாணைப்படி, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தொடக்க பள்ளிகளுக்கு தனியாக, மாவட்ட அதிகாரிகள் செயல்பட மாட்டார்கள்.

தற்போது, இந்த பணியில் உள்ள அதிகாரிகள், அனைத்து பள்ளிகளுக்கான மாவட்ட அதிகாரிகளாக மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளைப் போல், தங்களுக்கு வழங்கப்படும் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், அனைத்து வகை பள்ளிகளையும், கவனிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்களுக்கு அடுத்து தற்போது செயல்படும், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், வட்டார கல்வி அதிகாரிகளாக மாற்றப்பட்டுள்ளனர். உதவி அதிகாரிகள் அனைவரும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் கட்டளைப்படி செயல்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய அரசாணையால், தொடக்க கல்வி இயக்குனர், மெட்ரிக் இயக்குனர் ஆகியோருக்கான அதிகாரங்கள், தானாகவே குறைகின்றன. இதுவரை, தலைமையகத்தில் உள்ள, இணை இயக்குனர்கள் மேற்கொண்டு வந்த, பல நிர்வாக பணிகள், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனால், இணை இயக்குனர்களுக்கு இனி என்ன வேலை என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

பணிச்சுமை:
அதேபோல், தற்போதுள்ள நிலை மாற்றப்பட்டதால், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு அதிகாரம் கூடுதலாக வழங்கப்பட்டதுடன், பணிச்சுமையும் அதிகரித்துள்ளது. இதுவரை, பள்ளிக்கல்வி இயக்குனரின் கட்ட ளைப்படி செயல்பட்ட, சி.இ.ஓ.,க்கள், இனி தொடக்க கல்வி மற்றும் மெட்ரிக் இயக்குனரின் உத்தரவுகளையும் பின்பற்ற வேண்டும்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு