Skip to main content

வாட்ஸ் ஆப் அட்மின்களுக்கு அதிக அதிகாரம்!

வாட்ஸ் ஆப் உறுப்பினர்களுக்கு ஏற்ப பல்வேறு புதிய அம்சங்களை அந்த நிறுவனம் கண்டுபிடித்து இணைத்து வருகிறது. தற்போது "குரூப் அட்மின்' களுக்கு அதிகாரங்களை அதிகரித்து வழங்கியுள்ளது.
அதன்படி, வாட்ஸ் ஆப் குழுவை (குரூப்) உருவாக்கியவரை எப்போதும் வெளியேற்ற முடியாது. மேலும், குழுவின் நோக்கம், படம் (ஐகான்) ஆகியவற்றை மாற்ற யாருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற அதிகாரம் அட்மினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக குரூப் செட்டிங்கில் சென்றால் "அட்மின் கன்ட்ரோல்ஸ்' எனப்படும் புதிய சேவை உருவாக்கப்பட்டுள்ளது. அங்கே, குழுவின் விதிமுறைகள், நோக்கம் ஆகியவற்றை வரையறுக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் உறுப்பினராகச் சேர்வதற்கு முன் அந்தக் குழுவின் நோக்கம், விதிமுறைகள் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டு உள்ளே வரும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், வாட்ஸ் ஆப் குரூப் "சாட்'டில் உள்ள ஓர் உறுப்பினரைக் குறிப்பிட்டு நடத்தப்பட்ட "சாட்'டை, ஏராளமான "சாட்'களில் இருந்து அந்த உறுப்பினர் தேடிக் கண்டுபிடித்து படிக்க வேண்டியிருந்தது. தற்போது இந்தப் பிரச்னைக்குத் தீர்வளிக்கும் வகையில், ஏராளமாக "சாட்' களில் தன்னை குறிப்பிட்டு நடத்தப்பட்ட புதிய "சாட்'களையும், தான் பதிலளித்த "சாட்'களுக்கு வந்த பதில்களையும் மட்டும் கண்டு பிடிக்கும் வகையில் "குரூப் கேட்ச் அப்' என்ற புதிய சேவையை வாட்ஸ் ஆப் இணைத்துள்ளது.

இதற்காக சம்பந்தப்பட்ட நபர், குரூப்பின் வலதுபுறம் கீழே "ஃ' என்ற இணைக்கப்பட்டுள்ள புதிய பொத்தானைத் தட்டினால் போதுமானது.

அடுத்த முக்கிய அம்சமாக ஒரு குரூப்பில் இருந்து வெளியேறிய நபர், மீண்டும் அதே குரூப்பில் இணைக்க விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

"வாட்ஸ் ஆப் குரூப்களில் உறவினர்களும், சிறுவயது நண்பர்களும் பல ஆண்டுகளாக குரூப் "சாட்'களில் உறுப்பினர்களாக இருப்பதினாலும், இயற்கை பேரிடர்களின்போது வாட்ஸ் ஆப் குழுக்களின் மூலம் நிவாரணப் பொருள்கள் விநியோகிக்க பயன்படுத்தப்படுவதினாலும் இதுபோன்ற முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு