Skip to main content

வாட்ஸ் ஆப் அட்மின்களுக்கு அதிக அதிகாரம்!

வாட்ஸ் ஆப் உறுப்பினர்களுக்கு ஏற்ப பல்வேறு புதிய அம்சங்களை அந்த நிறுவனம் கண்டுபிடித்து இணைத்து வருகிறது. தற்போது "குரூப் அட்மின்' களுக்கு அதிகாரங்களை அதிகரித்து வழங்கியுள்ளது.
அதன்படி, வாட்ஸ் ஆப் குழுவை (குரூப்) உருவாக்கியவரை எப்போதும் வெளியேற்ற முடியாது. மேலும், குழுவின் நோக்கம், படம் (ஐகான்) ஆகியவற்றை மாற்ற யாருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற அதிகாரம் அட்மினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக குரூப் செட்டிங்கில் சென்றால் "அட்மின் கன்ட்ரோல்ஸ்' எனப்படும் புதிய சேவை உருவாக்கப்பட்டுள்ளது. அங்கே, குழுவின் விதிமுறைகள், நோக்கம் ஆகியவற்றை வரையறுக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் உறுப்பினராகச் சேர்வதற்கு முன் அந்தக் குழுவின் நோக்கம், விதிமுறைகள் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டு உள்ளே வரும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், வாட்ஸ் ஆப் குரூப் "சாட்'டில் உள்ள ஓர் உறுப்பினரைக் குறிப்பிட்டு நடத்தப்பட்ட "சாட்'டை, ஏராளமான "சாட்'களில் இருந்து அந்த உறுப்பினர் தேடிக் கண்டுபிடித்து படிக்க வேண்டியிருந்தது. தற்போது இந்தப் பிரச்னைக்குத் தீர்வளிக்கும் வகையில், ஏராளமாக "சாட்' களில் தன்னை குறிப்பிட்டு நடத்தப்பட்ட புதிய "சாட்'களையும், தான் பதிலளித்த "சாட்'களுக்கு வந்த பதில்களையும் மட்டும் கண்டு பிடிக்கும் வகையில் "குரூப் கேட்ச் அப்' என்ற புதிய சேவையை வாட்ஸ் ஆப் இணைத்துள்ளது.

இதற்காக சம்பந்தப்பட்ட நபர், குரூப்பின் வலதுபுறம் கீழே "ஃ' என்ற இணைக்கப்பட்டுள்ள புதிய பொத்தானைத் தட்டினால் போதுமானது.

அடுத்த முக்கிய அம்சமாக ஒரு குரூப்பில் இருந்து வெளியேறிய நபர், மீண்டும் அதே குரூப்பில் இணைக்க விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

"வாட்ஸ் ஆப் குரூப்களில் உறவினர்களும், சிறுவயது நண்பர்களும் பல ஆண்டுகளாக குரூப் "சாட்'களில் உறுப்பினர்களாக இருப்பதினாலும், இயற்கை பேரிடர்களின்போது வாட்ஸ் ஆப் குழுக்களின் மூலம் நிவாரணப் பொருள்கள் விநியோகிக்க பயன்படுத்தப்படுவதினாலும் இதுபோன்ற முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.