Skip to main content

சான்றிதழை மறுப்பதா: கல்லூரிகளுக்கு எச்சரிக்கை

'கட்டண பாக்கி பிரச்னையால், மாணவர்களுக்கு வழங்காமல் வைக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை உடனே வழங்க வேண்டும்' என, இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு, தமிழக உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் படிக்கும் தலித், அருந்ததியர் மாணவர்களின் கல்விக் கட்டணத்தில், பெரும் பகுதியை, உதவித்தொகையாக மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. இந்த தொகை, கல்வி நிறுவனங்களுக்கு, தமிழக அரசு மூலம் வழங்கப்படுகிறது.

'சில ஆண்டுகளாக, தமிழக அரசிடமிருந்து, இந்த நிதி முறையாக தங்களுக்கு கிடைக்கவில்லை' என, கல்வி நிறுவனங்கள் சார்பில் புகார் எழுந்தது. அதனால், கட்டண பாக்கி வைத்த மாணவர்கள் தேர்வு எழுத, பல இன்ஜி., கல்லுாரிகள் தடை விதித்தன. 
இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு புகார்கள் வந்ததால், கல்லுாரிகளுக்கு அரசு எச்சரிக்கை விடுத்தது. அதன்பின், மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தேர்வு எழுதிய பின், கட்டண பாக்கி வைத்திருந்த மாணவர்களின் சான்றிதழ்களை, இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகள் தராமல் வைத்து கொண்டன. 
அதனால், வேலை வாய்ப்புக்கும், உயர் படிப்புக்கும் செல்ல முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, உயர் கல்வித்துறையில், மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர்.இதையடுத்து, அனைத்து இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு, தொழில்நுட்ப கல்வித்துறை, சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் 'அனைத்து கல்லுாரிகளும், கட்டண பாக்கிக்காக, மாணவர்களிடம் பிடித்து வைத்துள்ள சான்றிதழ்களை, தாமதமின்றி வழங்க வேண்டும். அரசிடம் இருந்து உரிய நேரத்தில் நிதி கிடைக்கும். அதற்காக, மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வியில் முட்டுக்கட்டை போடக்கூடாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு