Skip to main content

பிளஸ்2 பொதுத்தேர்வு: பிப்.11 முதல் விடைத்தாளுடன் முகப்புத் தாளை இணைக்க அறிவுறுத்தல்

பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் முதன்மை விடைத்தாளுடன் முகப்புத் தாளை இம்மாதம் 11ஆம் தேதி முதல் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் இணைக்க வேண்டும்என அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி அறிவுறுத்தியுள்ளார்.பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்க உள்ளது. 



இதில், விருதுநகர் கல்வி மாவட்டத்தில் உள்ள 73 மேல்நிலைப் பள்ளிகளில் 8,510 மாணவ,மாணவியர், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 66 மேல்நிலைப் பள்ளிகளில் 7,902 மாணவ, மாணவியர், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் 60 மேல்நிலைப் பள்ளிகளில்   7,728 மாணவ,மாணவியர் என மொத்தம் 24,140 பேர் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.அதில், கல்வி மாவட்டத்தில் அமைக் கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு மொழிப்பாடங்களுக்கான முகப்புத்தாள் கட்டுகள் வெள்ளிக்கிழமை (பிப்.5) முதல் அனுப்பப்பட உள்ளன.

 இவற்றை முதன்மை கல்வி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களின் தலைமை ஆசிரியர்களிடம் இம்மாதம் 8 முதல் 11ஆம் தேதிக்குள் ஒப்ப டைக்க வேண்டும்.இம்மாதம் 11ஆம் தேதி முதல் முகப்புத் தாளை முதன்மை விடைத்தாளுடன் இணைக்கும் பணியில் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் என்றார் அவர். 

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு