Skip to main content

What is the Zika virus - DAY SCIENCE



உலகை அச்சுறுத்தும் ஜிக்கா வைரஸ் எப்படி பரவுகிறது?

உலகை அச்சுறுத்தும் ஜிக்கா வைரஸுக்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.ஜிக்கா வைரஸ் ஏடீஸ் கொசுக்கள் மூலம் பரவி வருகிறது. தென் அமெரிக்க நாடுகளில் ஜிக்கா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஜிக்கா வைரஸ் தற்போது 24 நாடுகளில் பரவியுள்ளது. அதில் தென் அமெரிக்க நாடான பிரேசலில் தான் அதிகமானோர் ஜிக்கா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களை பரப்பும் அதே வகை கொசுக்கள் மூலம் தான் ஜிக்கா வைரஸும் பரவுகிறது.

ஜிக்கா வைரஸ் பெரும்பாலும் கொசுக்கள் மூலம் தான் மனிதர்களிடையே பரவுகிறது. இந்த கொசுக்கள் நகர்ப்புற பகுதிகளில் உள்ள கட்டிடங்களை சுற்றி வாழ்கின்றன. ஏடீஸ் கொசுக்கள் பகல் நேரத்தில் தான் செயல்படுகின்றன.
ஏடீஸ் கொசுக்கள் அதிகாலை மற்றும் பிற்பகல் வேளைகளில் மனிதர்களை கடிக்கின்றன. ஜிக்கா வைரஸ் பாதிப்பு உள்ள ஒருவரின் ரத்தத்தை யாருக்காவது ஏற்றினால் அவரையும் வைரஸ் தாக்கும். ஜிக்கா வைரஸ் செக்ஸ் மூலமும் பரவுகிறது. மேலும் கர்ப்பிணியிடம் இருந்து குழந்தையை ஜிக்கா வைரஸ் தாக்குகிறது.

ஜிக்கா வைரஸால் தாக்கப்பட்டவர்களில் 5ல் ஒருவரின் உடல்நலம் பாதிக்கப்படும். ஜிக்கா வைரஸால் காய்ச்சல், அரிப்பு, மூட்டு வலி, கண் சிவப்பாகுதல், தசை வலி, தலைவலி ஒரு வாரத்திற்கு இருக்கும். செரிமானப் பிரச்சனையும் ஏற்படும். இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும். ஜிக்கா வைரஸ் தாக்குதலின் அறிகுறிகளும் டெங்கு, சிக்குன்குனியாவின் அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும்.

ஜிக்கா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஜிக்கா வைரஸ் தாக்கினால் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும், நிறைய நீர் குடிக்க வேண்டும், காய்ச்சலை கட்டுப்படுத்த மருந்து உட்கொள்ள வேண்டும்.

ஜிக்கா வைரஸ் பரவாமல் தடுக்க கொசுக்கள் அதிகரிப்பதை தடுக்க வேண்டும். கதவு, ஜன்னல்களை பூட்டி வைப்பதுடன் கொசுக்களை அழிக்கும் கிரீம்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டும். ஜிக்கா வைரஸ் பரவும் இடங்களுக்கு பயணம் செய்வோர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு