Skip to main content

J.E.E.: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

 2016-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கு (ஜே.இ.இ.) ஜனவரி 11 வரை ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்பக் கல்வி நிறுவனப் படிப்புகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வானது மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் சார்பில் (சி.பி.எஸ்.இ.) சார்பில் முதல் நிலைத் தேர்வும், முதன்மைத்
தேர்வும் நடத்தப்படுகிறது.


         முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்றவற்றில் சேரலாம். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றால் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி. கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.2016-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. பிரதானத் தேர்வு அறிவிப்பை நவம்பர் இறுதியில் வெளியிடப்பட்டது. டிசம்பர் 31 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜனவரி 11 வரை சி.பி.எஸ்.இ. நீட்டித்துள்ளது. தேர்வுக் கட்டணத்தை 12-ஆம் தேதி வரை செலுத்தலாம்.தேர்வு தேதி: ஜே.இ.இ. எழுத்துத் தேர்வு 2016 ஏப்ரல் 3-ஆம் தேதியிலும், ஆன்-லைன் தேர்வுகள் 2016 ஏப்ரல் 9,10 ஆகிய தேதிகளிலும் நடத்தப்பட உள்ளன. கூடுதல் விவரங்களை www.jeemain.nic.in இணையதளத்தில் அறியலாம். 

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்