Skip to main content

புதிய கல்விக் கொள்கை - 'பள்ளிகள் ஹோம் ஒர்க் கோ - எஜுகேஷன் கூடாது'


புதிய கல்விக் கொள்கையை உருவாக்க, தேவையான ஆலோசனைகளை அளிக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தது.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கல்விப் பிரிவான வித்யா பாரதி, பல்வேறு ஆலோசனைகள் அளித்துள்ளது; அதன் முக்கிய அம்சங்கள்:



* காலை, 7:30 மணி முதல், மாலை, 7:30 மணி வரை, 12 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்* வெளிநாட்டு மொழிகளுக்கு பதிலாக, சமஸ்கிருதம் கற்றுத் தர வேண்டும்

* சிறிய வயதில், மாணவர்கள், மிகவும் எளிதாக மொழிகளை கற்றுக் கொள்ள முடியும். அதன்படி, தாய்மொழி, சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகள் கற்றுத் தரப்பட வேண்டும்

* தற்போதைய, 6 மணி நேர பள்ளிநேரத்தில், இவற்றை கற்றுத் தர முடியாது.

* வழக்கமான பாடத்துடன், மொழி, இசை, விளையாட்டு ஆகியவற்றையும் கற்றுத் தர வேண்டும்

* இந்த புதிய பாடத் திட்டத்தின்படி, 'ஹோம் ஒர்க்' இருக்காது. இது, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் வசதியாக இருக்கும்

* இருபாலரும் ஒரே வகுப்பில் பயிலும், 'கோ - எஜுகேஷன்' முறை இருக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா