Skip to main content

மின் தடை தீர்க்க வருகிறது 'மொபைல் ஆப்'

மின் தடை, மீட்டர் பழுது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, 'மொபைல் போன் ஆப்' மூலம் தீர்வு காண, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், அரசின் சேவைகள், கணினி மயமாக்கப்பட்டு, மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட உள்ளன.

இணைய வசதி
இதற்காக, நாடு முழுவதும் உள்ள கிராமங்களில், இணைய வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில், 'வை - பை' வசதியும் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மின் வினியோக பிரச்னைகளுக்கு தீர்வு காண, 'மொபைல் ஆப் பார் அர்பன் பவர் டிஸ்ட்ரிபியூஷன் செக்டார்' என்ற சேவை, மின் நுகர்வோருக்கு வழங்கப்படும்.
இதற்காக, மாநில மின் வாரியங்கள், மொபைல் போன், 'ஆப்' என்ற செயலியை வெளியிடும். இதை, மின் நுகர்வோர், மொபைல் போனில், 'டவுண்லோடு' செய்து கொள்ள வேண்டும்.
இதில் உள்ள மென்பொருள் வாயிலாக, மின் தடை, மீட்டர் பழுது, மின் கட்டண குறைபாடு, புதிய மின் இணைப்பு வழங்க தாமதம் உள்ளிட்ட புகார்களை தெரிவிக்கலாம்.
தீர்வு காண...
இணையதளம் வாயிலாக, மின் கட்டணம் செலுத்துவதுடன், தினசரி மின் உற்பத்தி விவரத்தையும் அறியலாம். மின் வாரிய அதிகாரிகள், தங்கள் மொபைல் போனில், மின் நுகர்வோர் தெரிவிக்கும் புகார்களை பெற்று, தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த சேவைக்கான முதல் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் இச்சேவை நடைமுறை படுத்தப்படும் எனவும், மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்