Skip to main content

அரசு அலுவலகங்களுக்கு இலவச இணையதள இணைப்புகள்: ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

அரசு அலுவலகங்களுக்கு இலவச இணையதள இணைப்புகள்: ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு
தனியார் நிறுவனங்களிடம் இருந்து அரசு அலுவலகங்களுக்கு இலவச இணையதள இணைப்புகளைப் பெறுவது தொடர்பான மனு மீது ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை
உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டது.
தமிழக அரசு கடந்த 2000-ஆம் ஆண்டு மே மாதம் 4-ஆம் தேதி ஒரு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணைப்படி, தமிழகம் முழுவதும் சாலைகளில் பள்ளம் தோண்டி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கேபிள் வயரை பதித்துக் கொள்ளலாம். அதற்காக, தொடர்புடைய தனியார் நிறுவனங்கள் அரசுக்கு எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. அதற்கு பதில், அந்தப் பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு 20 ஆண்டுகளுக்கு இலவசமாக 2 எம்.பி.பி.எஸ் வேகத்தில் செயல்படும் இணையதள இணைப்புகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர், மனுதாரர் அளித்த மனு மீது தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் முடிவெடுத்து, இந்த உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா