Skip to main content

'நெட்' தேர்வில் யோகா பாடம் சேர்ப்பு

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலையின், ஒன்பதாவது பட்டமளிப்பு விழா, சென்னை ராஜ்பவனில் நேற்று நடந்தது. இதில், 161 மாணவ, மாணவியருக்கு, கவர்னர் ரோசய்யா பட்டங்களை வழங்கினார்.

அதில், 42 பேர் முனைவர் பட்டமும், 106 பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றனர்; 14 பேர் தங்கப்பதக்கம் பெற்றனர். நிகழ்ச்சியில், உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலை துணைவேந்தர் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின், யு.ஜி.சி., எனும் பல்கலை மானியக் குழு துணைத் தலைவர் தேவராஜ் அளித்த பேட்டி:யோகா பட்டப்படிப்புக்காக, யு.ஜி.சி., அளிக்கும், 400 கோடி ரூபாய், 44 பல்கலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும். 'நெட்' எனப்படும் உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வில், யோகா பாடமும் சேர்க்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா