Skip to main content

கற்றல் அடைவுத் திறன் குறித்து அதிகாரிகள் ஆய்வு

தமிழகம் முழுவதும் மிகவும் குறைவான திறன் அடைவு உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்புத் திறன் மற்றும் கணிதத் திறன்களில் மாணவர்களது அடைவுத் திறனின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை அனுப்பும்படி தொடக்கக் கல்வி இயக்ககம் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.


சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் குறித்து கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து, சேலம் மாவட்டம் முழுவதும் அண்மையில் 21 ஒன்றியங்களின் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களும், தாம் பணிபுரியும் ஒன்றியம் தவிர்த்து பிற ஒன்றியங்களுக்குச் சென்று ஆய்வு செய்து அறிக்கை தர அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டிருந்தார்.


அதைத்தொடர்ந்து, ஒவ்வொரு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களும், மிகவும் குறைவான அடைவுத் திறன் உள்ள 5 பள்ளிகளுக்குச் சென்றனர்.


அங்கு 2ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையில் மாணவர்களிடம் தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்புத் திறன், கணித அடிப்படைச் செயல்பாடுகள் போன்றவற்றில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பள்ளிகளில் கற்றல் அட்டைகள், சுகாதார செயல்பாடுகள், வகுப்பு ஆசிரியர் மாணவர்களை குழுக்கள் அடிப்படையில் அமர்த்தியுள்ளனரா என்று ஆய்வுகள் மேற்கொண்டனர்.


நிகழ் கல்வியாண்டின் ஆரம்ப மாதமான ஜூன் முதல் டிசம்பர் வரையில் மாணவர் திறன்களில் முன்னேற்றம் அடைந்துள்ளனரா என்றும் ஆய்வு செய்தனர்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு