Skip to main content

பேராசிரியர் நியமனம்; இன்ஜி., கல்லூரிகளுக்கு கட்டுப்பாடு

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பேராசிரியர்களை பணி அமர்த்துவது தொடர்பாக, அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., சில விதிமுறைகளை அறிவித்துள்ளது.


இதற்கு சில தரப்பில், எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எம்.இ., மற்றும் இன்ஜினியரிங் பிரிவில், பிஎச்.டி., போன்ற ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள், நெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின், இன்ஜினியரிங் கல்லுாரி
களில், பேராசிரியர்களாக நியமிக்கப் படுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லுாரிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.  அப்போது, எம்.இ., முடிந்த பேராசிரியர்கள் எண்ணிக்கையும் குறைவாக இருந்ததால், எம்.எஸ்சி., அல்லது எம்.சி.ஏ., படித்தவர்கள், அதன்பின், எம்.இ., படித்து, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பேராசிரியர்களாக சேர்ந்தனர்.

இப்படிப்பட்டவர்களால், பாடங்களை முழுமையாக கற்றுத்தர முடியவில்லை என, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் ஆய்வு நடத்திய, ஏ.ஐ.சி.டி.இ., அமைப்பு, பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக புதிய விதிமுறைகளை அறிவித்து உள்ளது. இதன்படி, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., படித்து, அதன்பின் எம்.இ., மற்றும் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்களை மட்டுமே பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏ.ஐ.சி.டி.இ., அறிவிப்பில் பல குளறுபடிகள் உள்ளன. 2010ம் ஆண்டோ, அதற்கு முன்னரோ, இன்ஜினியரிங் முதுநிலை பட்டப்படிப்பில் சேரும் போதே, இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தால், படித்திருக்க மாட்டோம்.   மாறாக படித்து முடித்த பின், ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்து புதிய விதிமுறை அமலாகும் என, அறிவித்திருப்பது நியாயமற்றது. வேலை தேடும் பட்டதாரிகள்   

புதிய விதிமுறைகள்

கலை, அறிவியல் கல்லுாரிகளில், இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பு முடித்து, தொடர்ந்து, எம்.சி.ஏ., அல்லது எம்.எஸ்சி., பட்டம் பெற்று, பின் எம்.இ., தேர்ச்சி பெற்ற வர்களை, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பேராசிரியர்களாக நியமிக்க முடியாது
அதேபோல, பி.இ., முடித்து, எம்.இ., படித்த பட்டதாரிகள், பி.இ.,யில், ஒரு பாடப்பிரிவு, எம்.இ., யில் ஒரு பாடப்பிரிவு என, மாற்றி மாற்றி படித்திருந்தாலும், அவர்களையும் பேராசிரியராக நியமிக்க முடியாது
பி.இ., - பி.டெக்., முடித்து, எம்.எஸ்., படித்தவர்களையும், பி.இ., படித்து நேரடியாக, ஆராய்ச்சி பட்டமான பிஎச்.டி., முடித்தவர்களையும், ஒருங்கிணைந்த, ஐந்து ஆண்டு பி.இ., -- எம்.பி.ஏ., முடித்தவர்களையும் பேராசிரியர் பணிக்கு அமர்த்தலாம்
இதே போல், ஒரே பாடத்தில், இரட்டை பட்டப்படிப்பு முடித்த, எம்.இ., பட்டதாரிகளையும் வேலைக்கு சேர்க்கலாம்
2010ம் ஆண்டுக்குப் பின், பணி அமர்த்தப்பட்டவர் களுக்கு, இந்த நிபந்தனைகள் பொருந்தும்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா