Skip to main content

சான்றிதழ் சரிபார்ப்பு : ஆசிரியர்கள் 'டிமிக்கி'.

சேலம் மாவட்டத்தில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாமல், பல ஆசிரியர்கள் டிமிக்கி கொடுத்து வருகின்றனர். ஒரிஜினல் சான்றிதழ்களை சமர்ப்பிக்காத ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களின் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், போலீசில் சிக்கிய, போலி சான்றிதழ் தயாரிப்பு கும்பல் கொடுத்த தகவலின்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், ஆ
சிரியர்கள் போலி சான்றிதழ் கொடுத்து, பணியில் சேர்ந்தது தெரிய வந்தது.


இதையடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து ஆசிரியர்களின் சான்றிதழ்களும், சிறப்பு குழுக்களின் மூலம் சரிபார்க்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில், கடந்த இரு நாட்களுக்கு முன் சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியது.இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த ஒருவர், ஒரிஜினல் சான்றிதழ்களை சமர்ப்பிக்காமல், நகல்களை மட்டும் கொடுத்துள்ளார். விசாரணையின் போது, போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். ஒரிஜினல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நிலையில், கடந்த இரு நாட்களாக ஆசிரியர் தலைமறைவாக இருந்து வருகிறார். இவரை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளதுடன், மேச்சேரி போலீஸ் ஸ்டேஷனில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இதே போல், சேலம் மாவட்டம் முழுவதும், பல ஆசிரியர்கள் ஒரிஜினல் சான்றிதழ்களை சமர்ப்பிக்காமல், பல்வேறு காரணங்களை கூறி இழுத்தடித்து வருகின்றனர். இவர்களின் பட்டியல்களை உடனடியாக தயாரித்து, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா