Skip to main content

அங்கன்வாடி பணியாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

அங்கன்வாடி மற்றும் குழந்தைகள் காப்பகப் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை மாவ
ட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் அங்கன்வாடி மற்றும் குழந்தைகள் காப்பகப் பணியாளர் (மாத சம்பளம் ரூ.3ஆயிரம்), காப்பக உதவியாளர் (மாத சம்பளம் ரூ.1,500) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


காப்பகப் பணியாளர் பணியிடத்துக்கு வயது 25 முதல் 35 வயது வரை, விதவை மற்றும் ஆதரவற்றவராக இருந்தால் 40 வயது, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காப்பக உதவியாளர் பணியிடத்துக்கு 20 வயது முதல் 40 வயது வரை, விதவை மற்றும் ஆதரவற்றவராக இருந்தால் 45 வயது, தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.உரிய விண்ணப்பங்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இணையதளமான www.icds.tn.nic.in ல் இருந்தும் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.கூடுதல் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதி குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் அல்லது தேனாம்பேட்டை, 2/124, தியாகராயா சாலையில் உள்ள இயக்குனர், குழும இயக்குனர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவரை அணுகலாம். 

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்