Skip to main content

வேலைவாய்ப்பு குறைவு என கல்விக் கடன் மறுப்பதா: உயர்நீதிமன்றம் உத்தரவு

  'பி.இ.,(சிவில்) படிப்பிற்கு வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது எனக்கூறி வங்கி நிர்வாகம் கல்விக் கடன் நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது, ' என, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை தமிழ்ச்செல்வம் தாக்கல் செய்த மனு :என் மகன் மதுரை சேது
பொறியியல் கல்லுாரியில் பி.இ.,(சிவில்) முதலாம் ஆண்டு படிக்கிறார்.
       கல்விக் கடன் ௩ லட்சத்து ௧௦ ஆயிரத்து ௨௦௦ ரூபாய் வழங்கக் கோரி, மதுரை நாராயணபுரம் ஸ்டேட் வங்கி கிளையில் விண்ணப்பித்தோம். கிளை மேலாளர் நிராகரித்தார். அதை ரத்து செய்து, கடன் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, தமிழ்செல்வம் மனு செய்திருந்தார்.நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு உத்தரவு: மனுதாரர் மகன் சேர்ந்துள்ள படிப்பிற்கு வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது எனக்கூறி கல்விக்கடன் நிராகரித்தது நியாயமற்றது. கடனை திருப்பிச் செலுத்த ஜாமின் உத்தரவாதம் அளிக்கவும், வங்கி விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. 
           பொருளாதார ரீதியாக வசதி வாய்ப்பற்றவர்களின் கல்வி பாதிக்கப்படாமல், படிப்பைத் தொடர வேண்டும் என்ற நோக்கில் கல்விக் கடன் திட்டம் கொண்டு வரப்பட்டது. கல்விக் கடன் மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுவை பரிசீலித்து, கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். மனுதாரர் வழக்கறிஞர் டி.ரமேஷ்குமார் ஆஜரானார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா