Skip to main content

பி.ஏ., - பி.எஸ்சி.,யுடன் இணைந்து பி.எட்., படிப்பு

பி.ஏ., மற்றும் பி.எஸ்சி.,யுடன் இணைந்த, பி.எட்., படிப்பை, வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்ய, திறந்தநிலை பல்கலை முடிவு செய்துள்ளது. 


            பல்கலை துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் அளித்த பேட்டி:எங்கள் பல்கலைக்கு, யு.ஜி.சி., மானிய அந்தஸ்து கிடைத்துள்ளது. இனி எங்கள் பல்கலைக்கு, புதிய படிப்புகள், ஆசிரியர் நியமனம், ஆய்வகம், ஆராய்ச்சி என, பல மேம்பாட்டு திட்டங்களுக்கும், மத்திய அரசின் நிதி கிடைக்கும்.

             இதையடுத்து, தேசிய மதிப்பீட்டு அங்கீகார கவுன்சிலான, 'நாக்' அனுமதி பெற உள்ளோம். இந்த அங்கீகாரம் கிடைத்தால், எந்த படிப்பையும், எங்கள் பல்கலையில் துவங்க முடியும்.வரும் கல்வி ஆண்டில், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் அனுமதி பெற்று, பி.எட்., நேரடி வகுப்புகளை துவங்க உள்ளோம். பி.ஏ., மற்றும் பி.எஸ்சி., படிப்புடன், பி.எட்., படிப்பும் இணைந்து படிக்கும் வகையில், ஒருங்கிணைந்த நான்காண்டு பட்டப்படிப்பாக நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா