Skip to main content

சென்னை கணிதப் பேராசிரியர் சிவராமனுக்கு தேசிய விருது சிவராமன்

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மத்திய அரசு வழங்கும் விருதுக்கு சென்னை கணிதப் பேராசிரியர் இரா.சிவராமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் பிப்ரவரி 29-ம் தேதி நடக்கும் தேசிய அறிவியல் தின விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.



சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் கணிதத் துறை இணை பேராசிரியராக பணியாற்றுபவர் இரா.சிவராமன். கணிதத்தைப் பரப்பும் நோக்கில் ‘பை மேத்தமேட்டிக்ஸ் அசோசி யேஷன்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். கணித மேதை ராமானுஜரின் விரிவான வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். கணிதத்தை கதைகளின் வழியாக விளக்கும் வகையில் அவர் எழுதிய ‘கதையில் கலந்த கணிதம்’ நூல், தமிழக அரசின் விருதைப் பெற்றுள்ளது.

‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் தொடர்ந்து கணிதக் கட்டுரைகளை எழுதிவருகிறார். உலகின் முதல் கணிதப் புத்தகம் முதலான சிறந்த கணிதப் புத்தகங்கள் பலவற்றின் உள்ளடக்கத்தை விளக்கி எழுதியுள்ளார். ராமானுஜ னின் சாதனைகள் உலகின் அறிவுத் துறைகளில் எத்தகைய தாக்கங் களை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் கட்டுரை வரைந்துள்ளார்.


கணிதத் துறையில் அவரது பங்களிப்புகளை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு அவருக்கு தேசிய விருது அறிவித்துள்ளது. தேசிய அறிவியல் தினமான பிப்ரவரி 29-ம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினத்தையொட்டி, அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா