Skip to main content

சென்னை கணிதப் பேராசிரியர் சிவராமனுக்கு தேசிய விருது சிவராமன்

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மத்திய அரசு வழங்கும் விருதுக்கு சென்னை கணிதப் பேராசிரியர் இரா.சிவராமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் பிப்ரவரி 29-ம் தேதி நடக்கும் தேசிய அறிவியல் தின விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.



சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் கணிதத் துறை இணை பேராசிரியராக பணியாற்றுபவர் இரா.சிவராமன். கணிதத்தைப் பரப்பும் நோக்கில் ‘பை மேத்தமேட்டிக்ஸ் அசோசி யேஷன்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். கணித மேதை ராமானுஜரின் விரிவான வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். கணிதத்தை கதைகளின் வழியாக விளக்கும் வகையில் அவர் எழுதிய ‘கதையில் கலந்த கணிதம்’ நூல், தமிழக அரசின் விருதைப் பெற்றுள்ளது.

‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் தொடர்ந்து கணிதக் கட்டுரைகளை எழுதிவருகிறார். உலகின் முதல் கணிதப் புத்தகம் முதலான சிறந்த கணிதப் புத்தகங்கள் பலவற்றின் உள்ளடக்கத்தை விளக்கி எழுதியுள்ளார். ராமானுஜ னின் சாதனைகள் உலகின் அறிவுத் துறைகளில் எத்தகைய தாக்கங் களை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் கட்டுரை வரைந்துள்ளார்.


கணிதத் துறையில் அவரது பங்களிப்புகளை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு அவருக்கு தேசிய விருது அறிவித்துள்ளது. தேசிய அறிவியல் தினமான பிப்ரவரி 29-ம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினத்தையொட்டி, அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்