Skip to main content

பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மொபைல் போன் கொண்டு வர தேர்வுத்துறை தடை

வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் வெளியான விவகாரத்தை தொடர்ந்து, 'பொதுத் தேர்வு மையங்களுக்கு ஆசிரியர்கள் மொபைல் போன் கொண்டு வரக்கூடாது' என, தேர்வுத்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.


முற்றுப்புள்ளி
கடந்த, 2015, பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது கணித தேர்வு நாளில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தனியார் பள்ளி தேர்வு மையத்தில் சில ஆசிரியர்கள் மூலம், 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் வெளியானது. இந்த ஆண்டு இப்பிரச்னைக்கு, தேர்வுத்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


'தேர்வு மைய பணிக்கு வரும் ஆசிரியர்கள், எந்தக் காரணத்திற்காகவும் மொபைல் போன் கொண்டுவரக் கூடாது. அதே போல், மாணவர்கள் மற்றும் ஊழியர்களும் மொபைல் போன் கொண்டுவரக் கூடாது' என, உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த பொதுத்தேர்வின் போது பல மாணவர்கள், 100க்கு, 97 சதவீதம் நன்றாக பதில்
எழுதியிருந்தாலும், விடைத்தாள் முழுவதையும், 'ஸ்கெச்சால்' அடித்திருந்தனர். இதை விசாரித்த போது, தேர்வில், 'சென்டம்' எடுக்க முடியாது என நினைத்தால், உடனடித் தேர்வை எழுதும் வகையில் விடைத்தாளை, 'ஸ்கெச்சால்' அடிக்கும் வழிமுறையை, தனியார் பள்ளி மாணவர்கள் மேற்கொண்டது தெரியவந்தது.

வரவேற்பு
எனவே, 'இந்த ஆண்டு, விடைத்தாளில் பதிலை எழுதிவிட்டு முழுவதுமாக, 'ஸ்கெச்சால்' அடிக்கக் கூடாது; அவ்வாறு அடித்தாலும் அந்த விடைத்தாள் திருத்தப்பட்டு மதிப்பெண் வழங்கப்படும்' என்றும், தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு, ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


முறைகேடுகளை தடுக்க, தேர்வுத்துறை எடுத்த முடிவுகளை வரவேற்கிறோம். தனியார் பள்ளிஆசிரியர்களுக்கும் இந்த உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். சத்தியமூர்த்தி, தலைவர் - உயர் மற்றும் மேல்நிலை தலைமை ஆசிரியர் சங்கம்

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு