Skip to main content

பொதுத்தேர்வு எழுதும் மாற்றுதிறனாளிகளின் கோரிக்கை

சேலம்: தமிழகத்தில்,அரசு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவ,மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ள,தேர்வுகால விதிமுறை மற்றும்வழிமுறைகளை,பள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறை தெளிவுப்படுத்த வேண்டும் என,வலியுறுத்தப்பட்டுள்ளது.



தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில செயலர் நம்புராஜன்,அரசுக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:நடப்பு கல்வியாண்டில்,பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2தேர்வு எழுதும்,மாற்றுத்திறனாளி மாணவ,மாணவிகளுக்கு,அரசு வகுத்துள்ள விதிமுறைகளை தெளிவுப்படுத்த வேண்டும்.


குறிப்பாக,அவர்களது,பெற்றோரை அலைக்கழிப்பு செய்யக்கூடாது. பார்வை இழப்பு,நரம்பியல் பாதிப்பு,கை செயல்பாடின்மை,மூளை முடக்குவாதம் மற்றும் மிதமான மனவளர்ச்சி பாதிப்புள்ள மாற்றுத்திறனாளி மாணவ,மாணவியர் தேர்வு எழுத,எழுத்தர்களை அமர்த்திகொள்ளவும்,தேர்வு எழுத,கூடுதலாக ஒருமணி நேரம்,எடுத்து கொள்ளவும் அரசு உத்தரவு உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவ,மாணவியர்,அவர்களாகவே,கல்வித்துறை அலுவலகத்துக்கு சென்று,இத்தகைய விதிமுறைகளை தெரிந்து,பின்பற்ற,வலியுறுத்த வேண்டி உள்ளது.இந்த குறைபாடுகளை களைய,பள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில்,பொதுத்தேர்வுக்கு முன்பாக,மாணவ,மாணவியருக்கு தேர்வுக்காக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை தெளிவு படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்