Skip to main content

பொதுத்தேர்வு எழுதும் மாற்றுதிறனாளிகளின் கோரிக்கை

சேலம்: தமிழகத்தில்,அரசு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவ,மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ள,தேர்வுகால விதிமுறை மற்றும்வழிமுறைகளை,பள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறை தெளிவுப்படுத்த வேண்டும் என,வலியுறுத்தப்பட்டுள்ளது.



தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில செயலர் நம்புராஜன்,அரசுக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:நடப்பு கல்வியாண்டில்,பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2தேர்வு எழுதும்,மாற்றுத்திறனாளி மாணவ,மாணவிகளுக்கு,அரசு வகுத்துள்ள விதிமுறைகளை தெளிவுப்படுத்த வேண்டும்.


குறிப்பாக,அவர்களது,பெற்றோரை அலைக்கழிப்பு செய்யக்கூடாது. பார்வை இழப்பு,நரம்பியல் பாதிப்பு,கை செயல்பாடின்மை,மூளை முடக்குவாதம் மற்றும் மிதமான மனவளர்ச்சி பாதிப்புள்ள மாற்றுத்திறனாளி மாணவ,மாணவியர் தேர்வு எழுத,எழுத்தர்களை அமர்த்திகொள்ளவும்,தேர்வு எழுத,கூடுதலாக ஒருமணி நேரம்,எடுத்து கொள்ளவும் அரசு உத்தரவு உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவ,மாணவியர்,அவர்களாகவே,கல்வித்துறை அலுவலகத்துக்கு சென்று,இத்தகைய விதிமுறைகளை தெரிந்து,பின்பற்ற,வலியுறுத்த வேண்டி உள்ளது.இந்த குறைபாடுகளை களைய,பள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில்,பொதுத்தேர்வுக்கு முன்பாக,மாணவ,மாணவியருக்கு தேர்வுக்காக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை தெளிவு படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா