Skip to main content

தகவல் ஆணையம் உத்தரவிட மறுப்பு : அரசின் அனைத்து இமெயில் முகவரியையும் தர முடியாது.

புதுடெல்லி: அனைத்து அரசு அதிகாரிகளின் இமெயில் முகவரியை தந்தால், நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.தேசிய தகவல் மையம், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப தேவைகளை வடிவமைத்து, ஆவணங்களை
பாதுகாத்து வருகிறது. அதன் பொறுப்பில் உள்ள, அமைச்சகம், அரசு அதிகாரிகள், மக்கள் நலத்துறை அதிகாரிகள், அமைப்புகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த இமெயில் முகவரியையும் தர வேண்டுமென கோரி ஆர்டிஐ ஆர்வலர் மணிராம் ஷர்மா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்திருந்தார். அதற்கு மறுப்பு ்தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.


மனுதாரரின் கோரிக்கையை தகவல் ஆணையத்தின் முழு பெஞ்சும் நேற்று நிராகரித்தது. முழு பெஞ்ச் தனது உத்தரவில், ‘அரசு அதிகாரிகள் அனைவரின் இமெயில் முகவரியையும் ஒட்டுமொத்தமாக சேர்த்து தருவதால், நாட்டின் பாதுகாப்புக்கு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இத்தகவல்களை யாராவது தவறாக பயன்படுத்தி, மக்கள் நலப்பணிகளில் குழப்பத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது’ என கூறியுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா