Skip to main content

தகவல் ஆணையம் உத்தரவிட மறுப்பு : அரசின் அனைத்து இமெயில் முகவரியையும் தர முடியாது.

புதுடெல்லி: அனைத்து அரசு அதிகாரிகளின் இமெயில் முகவரியை தந்தால், நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.தேசிய தகவல் மையம், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப தேவைகளை வடிவமைத்து, ஆவணங்களை
பாதுகாத்து வருகிறது. அதன் பொறுப்பில் உள்ள, அமைச்சகம், அரசு அதிகாரிகள், மக்கள் நலத்துறை அதிகாரிகள், அமைப்புகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த இமெயில் முகவரியையும் தர வேண்டுமென கோரி ஆர்டிஐ ஆர்வலர் மணிராம் ஷர்மா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்திருந்தார். அதற்கு மறுப்பு ்தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.


மனுதாரரின் கோரிக்கையை தகவல் ஆணையத்தின் முழு பெஞ்சும் நேற்று நிராகரித்தது. முழு பெஞ்ச் தனது உத்தரவில், ‘அரசு அதிகாரிகள் அனைவரின் இமெயில் முகவரியையும் ஒட்டுமொத்தமாக சேர்த்து தருவதால், நாட்டின் பாதுகாப்புக்கு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இத்தகவல்களை யாராவது தவறாக பயன்படுத்தி, மக்கள் நலப்பணிகளில் குழப்பத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது’ என கூறியுள்ளது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு