Skip to main content

தகவல் ஆணையம் உத்தரவிட மறுப்பு : அரசின் அனைத்து இமெயில் முகவரியையும் தர முடியாது.

புதுடெல்லி: அனைத்து அரசு அதிகாரிகளின் இமெயில் முகவரியை தந்தால், நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.தேசிய தகவல் மையம், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப தேவைகளை வடிவமைத்து, ஆவணங்களை
பாதுகாத்து வருகிறது. அதன் பொறுப்பில் உள்ள, அமைச்சகம், அரசு அதிகாரிகள், மக்கள் நலத்துறை அதிகாரிகள், அமைப்புகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த இமெயில் முகவரியையும் தர வேண்டுமென கோரி ஆர்டிஐ ஆர்வலர் மணிராம் ஷர்மா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்திருந்தார். அதற்கு மறுப்பு ்தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.


மனுதாரரின் கோரிக்கையை தகவல் ஆணையத்தின் முழு பெஞ்சும் நேற்று நிராகரித்தது. முழு பெஞ்ச் தனது உத்தரவில், ‘அரசு அதிகாரிகள் அனைவரின் இமெயில் முகவரியையும் ஒட்டுமொத்தமாக சேர்த்து தருவதால், நாட்டின் பாதுகாப்புக்கு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இத்தகவல்களை யாராவது தவறாக பயன்படுத்தி, மக்கள் நலப்பணிகளில் குழப்பத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது’ என கூறியுள்ளது.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்