புதுடெல்லி: அனைத்து அரசு அதிகாரிகளின் இமெயில் முகவரியை தந்தால், நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.தேசிய தகவல் மையம், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப தேவைகளை வடிவமைத்து, ஆவணங்களை
பாதுகாத்து வருகிறது. அதன் பொறுப்பில் உள்ள, அமைச்சகம், அரசு அதிகாரிகள், மக்கள் நலத்துறை அதிகாரிகள், அமைப்புகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த இமெயில் முகவரியையும் தர வேண்டுமென கோரி ஆர்டிஐ ஆர்வலர் மணிராம் ஷர்மா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்திருந்தார். அதற்கு மறுப்பு ்தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.
மனுதாரரின் கோரிக்கையை தகவல் ஆணையத்தின் முழு பெஞ்சும் நேற்று நிராகரித்தது. முழு பெஞ்ச் தனது உத்தரவில், ‘அரசு அதிகாரிகள் அனைவரின் இமெயில் முகவரியையும் ஒட்டுமொத்தமாக சேர்த்து தருவதால், நாட்டின் பாதுகாப்புக்கு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இத்தகவல்களை யாராவது தவறாக பயன்படுத்தி, மக்கள் நலப்பணிகளில் குழப்பத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது’ என கூறியுள்ளது.
Comments
Post a Comment