Skip to main content

உதவி பெறும் பள்ளியில் ஆய்வு நடத்த உத்தரவு.

அரசு உதவி பெறும் பள்ளிகளின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை தருமாறு, மாவட்ட அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 2,000க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன.

ஆசிரியர்களுக்கு சம்பளம், பள்ளி பராமரிப்பு செலவு மற்றும் மாணவர்களுக்கான சலுகைகளை, அரசே ஏற்றுக்கொள்கிறது. இப்பள்ளிகளில் பல, சுயநிதி பள்ளிகளை போல் செயல்பட்டு, பெற்றோர்களிடம் கட்டணம் என்ற பெயரில், அதிக தொகை வசூலிப்பதாக புகார் எழுந்து வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளின் அங்கீகாரம், மூன்று ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும்; அங்கீகாரம் புதுப்பித்தால் மட்டுமே, அப்பள்ளி மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு எழுத முடியும். இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகள் குறித்து ஆய்வு நடத்த, பள்ளி கல்வித்துறை, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் எண்ணிக்கை, பணி காலம், பாடப்பிரிவுகள், மாணவர்களுக்கான அரசு சலுகை குறித்து விவரம் சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் கட்டண வசூல் குறித்து, விசாரணை நடத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளை, பாமர மக்கள் பலரும் தனியார் பள்ளி என தவறாக கருதுவதால், பள்ளி முன் வளாக பகுதியில், "அரசு உதவி பெறும் பள்ளி' என பெயர் பலகை வைக்க, பள்ளி கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. பெரும்பாலான பள்ளிகளில், இப் பலகை வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதிகாரிகள் ஆய்வில், இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு