Skip to main content

திடீர் செட் தேர்வு அறிவிப்பால் விண்ணப்பதாரர்கள் வேதனை

இன்று அன்னை தெரசா பல்கலை கழகம் அடுத்த மாதம் 21-2-2016 தேதியில் செட் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால்  விண்ணப்பதாரர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.தேர்வு எழுத அளிக்கப்பட்ட கால அவகாசம் போதுமானதாக இல்லை என க
வலை தெரிவித்துள்ளனர்.


மேலும் நடப்பாண்டில் முதுகலை இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களும் செட் தேர்வுக்கு தயராவதா இல்லை பல்கலை கழக பாடத்திட்டத்திற்கு தயாராவதா என புலம்புகின்றனர். இது மட்டுமல்லாமல் தேர்வு கட்டணம் அதிகம் (பொது- ரூ.1500 , MBC&BC&BCM -1250 மற்றும் SC,/ST/PH&VH)  என நிர்ணயித்துள்ளது. இது மாணவர்களிடையே அரசின் மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைய வைத்துள்ளது. மேலும் அன்னை தெரசா பல்கலை கழகத்தில் துணை வேந்தர் இல்லாமல் செட் தேர்வு நடத்துவதால் வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு நடத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் ஏழை மாணவர்கள் பயன் பெறும் வகையில் புதிய தேர்வு தேதியுடன் குறைந்த கட்டணத்தை நிர்ணயித்து மறு அறிவிப்பினை விரைவில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு செட் நெட் சங்கத்தின் மண்டல பொறுப்பாளர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு