Skip to main content

விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

மிலாது நபி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இன்றே, மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ பாட புத்தகங்களை வழங்க
அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆண்டுதோறும், பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து, மிலாதுநபி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை விடப்படும்.


ஆனால், இந்த ஆண்டு மழை, வெள்ள பாதிப்பால் அரையாண்டு தேர்வு, ஜனவரி மாதத்துக்கு தள்ளி போடப்பட்டது. ஆனால், வழக்கம் போல் பண்டிகை கால விடுமுறை டிச., 24 முதல் அறிவிக்கப்பட்டது. நேற்றுடன் விடுமுறை முடிந்து, இன்று அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.இன்று பள்ளிகள் திறந்ததும், 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும், மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. அத்துடன், மூன்றாம் பருவ பாடங்களையும் நடத்த, ஆசிரியர்களுக்கு கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா