Skip to main content

'ப்ளே ஸ்கூல்'களுக்கு கட்டணம் நிர்ணயம்

    'ப்ளே ஸ்கூல்' எனப்படும், கே.ஜி., முதல், 3ம் வகுப்பு வரையிலான மழலையர் பள்ளிகளுக்கான கட்டணத்தை, நீதிபதி சிங்காரவேலர் கமிட்டி நிர்ணயம் செய்ய உள்ளது. 

            தமிழகத்தில், 4,000 ப்ளே ஸ்கூல்கள் உள்ளன. எப்படி இருக்க வேண்டும்? 
* அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகள் அமலான ஆறு மாதத்துக்குள், ப்ளே ஸ்கூல்களுக்கான, அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க
வேண்டும். இல்லையெனில், அவை மூடப்படும்

* அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தலுக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரியே பொறுப்பு. அங்கீகாரமானது, மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்; பின், அதை புதுப்பிக்க வேண்டும் 
* பள்ளி கட்டடங்கள் சொந்தமாகவோ அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல், குத்தகைக்கு பெற்றதாகவோ இருக்க வேண்டும். அத்துடன், கான்கிரீட் கட்டடங்களாக, சுற்றுச்சுவருடன் இருக்க வேண்டும் 
* வகுப்பறைகள் தரை தளத்தில் மட்டுமே இருக்க வேண்டும்
* கழிப்பறை, குடிநீர், விளையாட்டு மைதானம் போன்றவை சரியாக அமைக்கப்பட வேண்டும். குப்பை தொட்டிகள், அதிக ஒலி எழுப்பும் போக்குவரத்து சாலைகள், தொழிற்சாலைகள், பெட்ரோல் 'பங்க்' அருகே பள்ளிகள் இருக்கக்கூடாது 
* பள்ளி முழுவதும் கண்காணிப்பு கேமரா இருக்க வேண்டும்.
* ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, 31ம் தேதியுடன், ஒன்றரை வயதை பூர்த்தி செய்த குழந்தைகளை மட்டுமே சேர்க்க வேண்டும். அனுமதிக்கு நுழைவுத் தேர்வு கூடாது. முதலுதவி, மருத்துவ வசதிகள் வேண்டும் 
* பஸ், வேன் போன்றவற்றை குழந்தைகளை அழைத்து வர பயன்படுத்தலாம்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு