Skip to main content

'ப்ளே ஸ்கூல்'களுக்கு கட்டணம் நிர்ணயம்

    'ப்ளே ஸ்கூல்' எனப்படும், கே.ஜி., முதல், 3ம் வகுப்பு வரையிலான மழலையர் பள்ளிகளுக்கான கட்டணத்தை, நீதிபதி சிங்காரவேலர் கமிட்டி நிர்ணயம் செய்ய உள்ளது. 

            தமிழகத்தில், 4,000 ப்ளே ஸ்கூல்கள் உள்ளன. எப்படி இருக்க வேண்டும்? 
* அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகள் அமலான ஆறு மாதத்துக்குள், ப்ளே ஸ்கூல்களுக்கான, அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க
வேண்டும். இல்லையெனில், அவை மூடப்படும்

* அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தலுக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரியே பொறுப்பு. அங்கீகாரமானது, மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்; பின், அதை புதுப்பிக்க வேண்டும் 
* பள்ளி கட்டடங்கள் சொந்தமாகவோ அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல், குத்தகைக்கு பெற்றதாகவோ இருக்க வேண்டும். அத்துடன், கான்கிரீட் கட்டடங்களாக, சுற்றுச்சுவருடன் இருக்க வேண்டும் 
* வகுப்பறைகள் தரை தளத்தில் மட்டுமே இருக்க வேண்டும்
* கழிப்பறை, குடிநீர், விளையாட்டு மைதானம் போன்றவை சரியாக அமைக்கப்பட வேண்டும். குப்பை தொட்டிகள், அதிக ஒலி எழுப்பும் போக்குவரத்து சாலைகள், தொழிற்சாலைகள், பெட்ரோல் 'பங்க்' அருகே பள்ளிகள் இருக்கக்கூடாது 
* பள்ளி முழுவதும் கண்காணிப்பு கேமரா இருக்க வேண்டும்.
* ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, 31ம் தேதியுடன், ஒன்றரை வயதை பூர்த்தி செய்த குழந்தைகளை மட்டுமே சேர்க்க வேண்டும். அனுமதிக்கு நுழைவுத் தேர்வு கூடாது. முதலுதவி, மருத்துவ வசதிகள் வேண்டும் 
* பஸ், வேன் போன்றவற்றை குழந்தைகளை அழைத்து வர பயன்படுத்தலாம்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா